Yuvraj Singh, Yuvraj Singh IPL, IPL 2017, IPL 2017, Cricket

இடது கை இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்க் கிங்ஸ் XI பஞ்சாபுடன் நடக்கும் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிகிறது. முதலில் பட்டய கிளப்பிய யுவராஜ் சிங்க், அதன் பிறகு நடந்த போட்டிகளில் அவர் விளையாததால் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியது. அவர் காய்ச்சல் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.

போட்டி தொடங்குவதற்கு முன்பு வரை நாங்கள் யுவராஜை பற்றி முடிவு எடுக்கமாட்டோம் . ஏனென்றால் அவர் எங்கள் அணியின் முக்கிய வீரர் என ஐதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பல நாள் கழித்து வந்த யுவராஜ் சிங்க் பட்டய கிளப்பினார். அதே தொடரில் அவருடைய ஒருநாள் போட்டியில் அதிக ரன்னும் அடித்தார்.

“யுவராஜ் சிங்க் காய்ச்சலால் அவதி பட்டு வருகிறார் அதனால் தான் அவர் கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.அனால் ஆனால் அவர் செம்ம பார்மில் இருக்கிறார்.முதல் போட்டியில் பெங்களூருடன் 27 பந்துகளில் 62 ரன் அடித்து வெற்றியை தேடி தந்தார்” என பயிற்சியாளர் டாம் மூடி கூறினார்.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியும், ஒரு போட்டியில் முடிவில்லாமலும், 3 போட்டியில் தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில உள்ளது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *