இங்கிலாந்தில் ஜூன் 1-ஆம் தேதி மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் தொடங்குகிறது. இதற்காக லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால், காய்ச்சல் காரணமாக வழக்கமான 2 மணி-நேரம் பயிற்சியில் யுவராஜ் சிங் கலந்து கொள்ள வில்லை.
பருவநிலை காய்ச்சல் காரணமாக பயிற்சியில் ஈடுபடவில்லை என்று தகவல்கள் வந்துள்ளன. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் அவர் காய்ச்சலில் இருந்து விடுபடுவார் என அணி நிர்வாகம் நம்புகிறது.
சமீபத்திய தகவலின் படி, அவர் பரிசோதித்த மருத்துவர்கள், கூடிய விரைவில் பயிற்சியில் ஈடுபடுவார் என கூறினார்கள்.
இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பியின் முதல் போட்டியில் ஜூன் 4-ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த போட்டிக்கு முன்னால், காய்ச்சலில் இருந்து விடுபட்டு பயிற்சியில் ஈடுபடுவார் என தெரிகிறது.
அந்த போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்தியா விளையாடவுள்ளது. முதல் போட்டி மே 28-ஆம் தேதி நியூஸிலாந்து அணியுடனும், இரண்டாம் போட்டி மே 30-ஆம் தேதி வங்கதேச அணியுடனும் விளையாடுகிறது.
இதனால் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் யுவராஜ் சிங் விளையாட மாட்டார் என தெரிகிறது.
ஆனால், பீல்டிங், பவுலிங், பேட்டிங் பயிற்சியில் மீதம் உள்ள 14 வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு, தீவிரமாக பயிற்சி எடுக்கிறார்கள்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து வந்தடைந்தது. இதனால், 2013 சாம்பியன்ஸ் ட்ராப்பியில் விளையாடாத யுவராஜ் சிங், 2017 சாம்பியன்ஸ்ட் ட்ராப்பியில் விளையாட சந்தோசமாக உள்ளார்.
2000-இல் முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய யுவராஜ் சிங், அவர் விளையாடிய 296 போட்டிகளில் 8,538 ரன் (சராசரி 36.80), அதனுள் 14 சதம், 51 அரைசதம் அடங்கும். அதுமட்டுமில்லாமல், ஒருநாள் போட்டியில் 93 கேட்ச் பிடித்துள்ளார்.