சாம்பியன்ஸ் ட்ராப்பி: முதல் பயிற்சி போட்டியில் இருந்து யுவராஜ் விலகல்

காய்ச்சலால் அவதிப்படும் யுவராஜ் சிங், நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி படுத்தியது. இந்த ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், மே 27-ஆம் தேதி பயிற்சியில் ஈடுபடவில்லை.

ஆனால், காய்ச்சல் பெரிதல்ல என பிசிசிஐ கூறியது.

ஆனால், இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் கடின பயிற்சி எடுத்து வருவதாக தகவல் வந்தது. முதல் பயிற்சி போட்டியில் தோனி, கோலி, ரஹானே ஆகியோர் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பயிற்சி போட்டியில் மே 30-ஆம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது இந்தியா. இந்த போட்டிக்கு முன்னால் பயிற்சியில் ஈடுபட்டு, 2வது பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவர் என எதிர்பார்க்க படுகிறது.

இந்த ஜனவரியில் இங்கிலாந்துடன் 3-போட்டி கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடிய யுவராஜ் சிங் 210 ரன் அடித்தார், அதில் அவர் அடித்த 150-ரன் அடங்கும். இதனால், சாம்பியன்ஸ் ட்ராப்பியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

இங்கிலாந்திற்கு வருவதற்கு முன்னதாகவே, தோனி மற்றும் யுவராஜின் அனுபவம் எங்களுக்கு உதவியளிக்கும் என விராட் கோலி கூறினார்.

இந்த சாம்பியன்ஸ் ட்ராப்பியில் தன்னுடைய முதல் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது இந்திய அணி.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.