இந்திய அணியின் அடுத்த விராட் கோலியும் இவர் தான்... ரோஹித் சர்மாவும் இவர் தான்... உலகக்கோப்பையில் மிரட்ட போறான்; சுரேஷ் ரெய்னா உறுதி !! 1
இந்திய அணியின் அடுத்த விராட் கோலியும் இவர் தான்… ரோஹித் சர்மாவும் இவர் தான்… உலகக்கோப்பையில் மிரட்ட போறான்; சுரேஷ் ரெய்னா உறுதி

இந்தநிலையில், எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா, சுப்மன் கில் இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டிற்கு பிறகு இந்த வருடம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளது. அக்டோபர் 5ம் தேதி துவங்க இருக்கும் உலகக்கோப்பை தொடர் நவம்பர் 19ம் தேதி நிறைவடைய உள்ளது.

இந்திய அணியின் அடுத்த விராட் கோலியும் இவர் தான்... ரோஹித் சர்மாவும் இவர் தான்... உலகக்கோப்பையில் மிரட்ட போறான்; சுரேஷ் ரெய்னா உறுதி !! 2

உலகக்கோப்பை தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

இளம் வீரர்கள் பலருக்கு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தாலும், ஷிகர் தவான், யுஸ்வேந்திர சாஹல், ஷிகர் தவான் போன்ற சீனியர் வீரர்கள் சிலருக்கு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இதில் பேட்டிங்கில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது பல முன்னாள் வீரர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஷிகர் தவானின் இடம் இளம் வீரரான சுப்மன் கில்லிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவரே உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராகவும் களமிறங்க உள்ளார்.

இந்திய அணியின் அடுத்த விராட் கோலியும் இவர் தான்... ரோஹித் சர்மாவும் இவர் தான்... உலகக்கோப்பையில் மிரட்ட போறான்; சுரேஷ் ரெய்னா உறுதி !! 3

ஷிகர் தவானுக்கு இடம் கொடுக்காததை விமர்சித்து பேசிய முன்னாள் வீரர்களில் ஒருவர் கூட, சுப்மன் கில்லிற்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என்று கூறவில்லை, அந்த அளவிற்கு சுப்மன் கில் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படும் சுப்மன் கில்லை முன்னாள் வீரர்கள் பலரும் வெகுவாக பாராட்டி வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான சுப்மன் கில்லும் தன் பங்கிற்கு சுப்மன் கில்லை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்திய அணியின் அடுத்த விராட் கோலியும் இவர் தான்... ரோஹித் சர்மாவும் இவர் தான்... உலகக்கோப்பையில் மிரட்ட போறான்; சுரேஷ் ரெய்னா உறுதி !! 4

இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், “உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக இருப்பார். சுப்மன் கில் இந்திய அணியின் சூப்பர் ஸ்டாராக இருக்க முயற்சித்து வருகிறார், அதே போல் இந்திய அணியின் அடுத்த விராட் கோலியாகவும் சுப்மன் கில் முயற்சித்து வருகிறார். இந்திய அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக மாறுவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும், திறமையும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது. சுப்மன் கில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளவதை பார்ப்பதற்காக அழகாக உள்ளது. சுப்மன் கில்லிற்கு எந்த இடத்தில் பந்துவீச வேண்டும் என்பதையே சுழற்பந்து வீச்சாளர்களால் கண்டறிய முடியாது. கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணிக்காக என்ன செய்தாரோ அதை சுப்மன் கில் இந்த வருட உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக செய்து கொடுப்பார் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *