சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜடேஜாவை மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது. ஐசிசியின் ஒழுங்குமுறை விதிப்படி ஒருவர் மீது அவற்றை அச்சுருத்தும் வகையில் ஏதாவது பொருளை அல்லது பந்தை கொண்டு எறிந்தாலோ அல்லது எறிய முற்பட்டாலோ அது ஐசிசியின் விதியை மீறி செயலாகும். அவர் ஐசிசியின் ஒழுங்கு விதிமுறைகளை இரண்டாவது முறையாக மீறியதற்காக அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்தது.
இந்நிலையில் மூன்றாவது போட்டியில் ஜடெஜாவிற்க்கு மற்றாக யார் இறக்கப்படுவார் என எதிர்பார்ப்பு அதிகரித்தது. முன்னரே அணியுடன் குல்தீப் யாதவ் இருந்தாலும் மேலும் எச்ச்ரிக்கையாக அக்சர் படேல் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோரை இலங்கைக்கு அழைத்துள்ளது இந்திய அணி. இதில் சிறப்பு என்னவென்றால் அழிக்கப்பட்ட இருவருமே ஆல் ரவுண்டர்கல். தற்போது டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் பவுலர் ஆகவும் நம்பர் 3 ஆல்ரவுண்டராகவும் இருந்து வரும் ரவீந்தர ஜடேஜாவிற்க்கு மாற்று வீரரை அணியில் சேர்ப்பது மிகவும் கடினமான வேளையாகும்
ஜடெஜாவிற்க்கு கிட்ட தட்ட சிறந்த மாற்று அக்சர் படெல் மட்டுமே. ஆனால் தற்போது அணியுடன் இருக்கும் சைனாமேன் பவுலர் குல்திப் யாதவ் செயல்படுவார் என்பதில் சிறிது சந்தேகம் தான். ஏனெனில் குல்திப் யாதவ் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே அவரால் ஜடேஜாவை போல் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் சிறப்பாக செயல்பட முடியும் என தெரியவில்லை.
அதே போல் அக்சர் ப்டேலை எடுத்துகொண்டால், தற்போது தென்னப்பிரிக்க ஏ அணியுடனான ஒரு நாள் தொடரில் வென்ற நிலையில் அவர் தென்னாப்பிரிக்கவில் இருந்து இலங்கை வந்தபின் பயிற்ச்சியில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் தனது விரலை காயபடுத்திக் கொண்ட ஜடேஜாவிற்க்கு மாற்றாக அக்சர் படெல் தான் அழைக்கப்பட்டர் என்பதும் குற்ப்பிடத்தக்கது.
ஜெயந்த் யாதவை எடுத்துக் கொண்டோமானால், கடந்த வருடம் டெஸ்ட் பொட்டியில் அறிமுகமான அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கி , சதம் அடிதத அவர் (106) 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மூன்றாவது டெஸ்ட்போட்டி வரும் 12 ஆம் தேதி நடக்கும், என்னவாயினும் குல்தீப் யாதவ் தான் அணியில் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் என்பதும் குரிப்பிடத்தக்கது.