சாம்பியன்ஸ் டிராபி ஜூன் 1ஆம் தேதி தொடங்கியது, ஆனால் இந்தியா பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தான் தொடங்குகிறது.
இந்தியா பாகிஸ்தான் போட்டி ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று சொன்னதில் இருந்து, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம். இந்த போட்டியின் டிக்கெட்டுகள் விற்க தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் காலியானது.
இந்த போட்டி பாதிக்கும் என வானிலை அறிக்கை அறிவித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் மழை பெய்து கொண்டு வருகிறது. இதனால், அது உண்மையாக நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், அதே மைதானத்தில் ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து போட்டி மழையால் பாதித்தது.
அந்த போட்டி மழையால் பாதித்ததால் ஸ்டீவ் ஸ்மித் சந்தோசமாக உள்ளார், ஏனென்றால் ஒரு நேரத்தில் ஆஸ்திரேலியா அணி தோற்றுவிடும் போல் இருந்தது, அந்த நேரத்தில் மழை குறிக்கிட்டதால் ஸ்டீவ் ஸ்மித் சந்தோசமாக இருப்பார்.