2000 வரைக்கும் பாகிஸ்தான் அணியை எந்த அணியும் எளிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள். அந்த காலத்தில், பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதற்கே பயந்த காலம் உண்டு.
கடந்த தசாப்தம் வரைக்கும் பாகிஸ்தான் அணி சிறப்பாக கிரிக்கெட் விளையாடி அசத்தியது. அந்த அணியுடன் விளையாடினாள் த்ரில்லிங் பயங்கரமாக இருக்கும், இதனால் அந்த போட்டிகளை அனைவரும் ரசித்து பார்ப்பார்கள்.
அந்த தசாப்தம் முடிந்தும், பாகிஸ்தான் அணிக்கு ராசி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சிறப்பான ஆட்டத்தை செயல் படுத்த மாட்டுகிறார்கள். இதனால் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணி 8வது இடத்திற்கு சென்றது.
அத்துடன் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மண்ணை கவ்வியது. அந்த போட்டி முடிந்த பிறகு முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பான ஆட்டத்தை வெளி படுத்தவேண்டும் என கூறினார்.
“பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடவேண்டும், முதல் நிலை கிரிக்கெட் நன்றாக விளையாடவேண்டும், அடிக்கடி கிரிக்கெட் விளையாடவேண்டும்,” என கங்குலி கூறினார்.
“பாகிஸ்தான் அணி வெற்றி பெற சில வீரர்கள் தேவை. வாசிம், வாக்கர், மியான்டாட், சலீம் மாலிக் ஆகிய வீரர்கள் ஆலோசனை கூற வேண்டும் ஏனென்றால் கிரிக்கெட்டிற்கு நல்ல பாகிஸ்தான் அணி தேவை,” என கூறினார்.
“2007 உலக கோப்பை இறுதி போட்டியில், அந்த போட்டியை மிஸ்பா கடைசி வரை கொண்டு போனார், ஆனால் கடைசி சமயத்தில் அவுட் ஆனார். இவர்களெல்லாம் பாகிஸ்தானிற்கு விளையாடும் போது, போட்டி த்ரில்லிங்காக இருக்கும்,” என கங்குலி மேலும் கூறினார்.