அடுத்த ஆஸ்திரேலிய தொடருக்குப்பின் தோனி நீக்கப்பட 3 காரணங்கள்
இந்திய அணி இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவுடனான தொடரில் இந்தியாவில் விளையடவுள்ளது. இந்த தொடரில் இலங்கைத் தொடரைப் போலவே பல்வேரு மாற்றங்கள் ஏற்ப்படலாம் எனத் தெரிகிறது.
வேறு கோணத்தில் நாம் பார்த்தோமேயானால், இந்த ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் தோனி, யுவராஜ் சிங்க் போன்ற சீனியர் வீரர்களுக்கு முடிவாகக் கூட இருக்கலாம்.
இந்த இலங்க தொடரில் தோனி மிகச் சிறப்பாகத் தான் விளையாடினார். அதில், மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒப்பு சப்பு இல்லாத இலங்கை அணியிடம் சற்று தடுமாரித் தான் விளையாடினார் என்று தான் கூற வேண்டும்.
தற்போது, ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் தோனி கழட்டைவிடப்பட 3 காரணங்களைப் பார்ப்போம்.
1. அடுத்த உலகக்கோப்பை
ஔத்த உலகக் கோப்பைக்கு இன்னு 2 வருடங்கள் இருக்கும் நிலையில், இந்தியா ஒரு நன்றாக செட் செய்யப்பட்ட அணியைத் தான்எதிர் பார்க்கும். தோனி இந்த ஆஸ்திரேலியத் தொடரில் சற்று தடுமாறினால் கூட அது அவருக்கு பிரச்சனை தான்.
அவரை வேகு விரைவில் நீக்கிவிட்டாலும், அடுத்த வரும் புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நன்றாக அணியில் செட் ஆவதற்க்கு நேரம் கிடைக்கும்
2.பினிசிங்க் திறமைகள் வலுவிழத்தல்
ஒரு காலத்தில் பினிசிங்க் எனர செயலுக்காகவே செய்யப்பட்டவர் போல ஆடி வந்தார் தோனி. தற்போது அவரது சாயமும் வெளுக்கத் துவங்கி விட்டார் போல் தான் தெரிகிறது.

6ஆவது விக்கெடிற்க்கு அவரை அனுப்பி அவர் அந்த இடத்திற்கேற்ப்ப வேகமாக ரன் அடிக்கத் தவரும் படசத்தில் அவருடைய இடம் இந்திய அணியில் கேள்விக்குறி தான்.
3.ரிசப் பாண்ட்டின் எழுச்சி
இந்தியா கிரிக்கெட்டின் அடுத்த் தலைமுறையை கருத்தில் கொண்டு பார்ரக்கும் பட்ச்சத்தில் , அடுத்த கட்டம் ரிச்ப் பாண்ட் போன்ர இளம் வீரர்களை வைத்து தான் தயாராகி வருகிறது.
19 வயதேயான அவர் கடந்த வருடம் தான் இந்திய அணிக்காக டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வரும் இவர் தோனியின் இடத்திற்க்கு ஆப்பு வைக்கத் தயாராகிவிட்டார் என்றுதான் கூறவேண்டும்.
ரஞ்சி தொடரில் போன வருடம் மட்டும் 972 ரன் குவித்துள்ளர். மேலும், ஐ.பி.எல் போட்டியில் 14 ஆட்டங்களில் 366 ரன் குவித்துள்ளார்.