கிரிக்கெட் வரலாற்றின் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்கள் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் மகேந்திர சிங் தோனி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது அறிமுக போட்டியில் இருந்தே தன் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள். ஆனால், எல்லா போட்டியிலும் தோனி சிறப்பாக விளையாட, ஒவ்வொரு போட்டிகளில் டி வில்லியர்ஸ் திணறுவார்.
2016 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்ளாத டி வில்லியர்ஸ், ஒருநாள் போட்டிகளில் கவனும் செலுத்துகிறேன் என்றார். ஆனால், கேப்டன் பதவியில் இருந்து விலகி, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தயார் என்றார் டி வில்லியர்ஸ். இவர் போல சிறந்த வீரருக்கு கஷ்டமாக இருக்கிறது என்றால் ஆச்சரியம் தான். 2015 உலககோப்பைக்கு பிறகு தோனியால் மற்றும் எப்படி இவ்வளுவு நாள் விளையாடுகிறார் என்று தோனியை ஊக்கப்படுத்தினார்.
2015 உலகக்கோப்பையில் தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி வீழ்த்திய பிறகு, டி வில்லியர்ஸ் கூறியதை நினைவு படுத்தி பார்க்கலாம்.
“நான் ஏற்கனவே கூறிவிட்டேன், என்னால் சரியாக சொல்ல முடியாது, இன்னும் எத்தனை நாள் அவர் விளையாடுவார் என்று தெரியவில்லை. 2015 உலகக்கோப்பை முடிந்ததும் நான் அவரிடம் கேட்டேன். இந்திய அணி எங்கள் அணியை மெல்போர்ன் மைதானத்தில் வீழ்த்தியது. போட்டி முடிந்த பிறகு, இன்னும் எத்தனை நாள் இதை செய்ய போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு “ஒவ்வொரு வினாடியும் நான் இதை விரும்புகிறேன்,” என்று கூறினார்,” என டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.
“அப்பொழுது தான் நான் உணர்ந்தேன் அவர் எப்படியா பட்ட மனிதர் என்று. அவருடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு நான் எப்போதும் மரியாதை தருவேன்,” என அவர் மேலும் கூறினார்.
அந்த பேட்டியை காணுங்கள்: