AB De Villiers, Royal Challengers Bangalore, Mumbai Indians, IPL 2017, Cricket

‘இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி தான் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் டி20 கிரிக்கெட் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் 10வது தொடர் வெற்றிகரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த தொடரில் 40 லீக் போட்டிகள் முடிந்து விட்டன. இன்னும் சில லீக் போட்டிகள் மீதம் உள்ளது. நட்சத்திர வீரர்கள் அடங்கியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் அணியாய் இந்த தொடரில் இருந்து வெளியே சென்றது.

பெங்களூரு அணியின் வெளிநாட்டு நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என கணித்துள்ளார். மேலும், பெங்களூர் அணி இந்தியா தொடரில் இருந்து வெளியேறுவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

“எதிர்பாராத விதமாக இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் எங்கள் அணியால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது. ஆனால் இந்த தோல்விகளில் இருந்து பல தேவையான பாடங்களை கற்றுக்கொண்டோம். இனி எதையும் மாற்ற முடியாது. எஞ்சியுள்ள போட்டிகளை வெற்றியுடன் முடிக்க முயற்சிப்போம். தற்போது பங்கேற்கும் அணிகளில், மும்பை அணி, சமபலத்துடன் காணப்படுகிறது. அவர்கள் இந்த ஆண்டு கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன்,” என டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *