92 வயதில் அஸ்வின் தாத்தா காலமானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் தாத்தா 92 வயதில் காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவரது தாத்தா நாராயணசாமி மரணமடைந்தார்.

92 வயதை எட்டிய அவர் ரயில்வேயில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவரும் தீவிரமான கிரிக்கெட் ரசிகர். அஸ்வின், கிரிக்கெட் விளையாட்டில் கலக்குவதற்கு உறுதுணையாக இருந்தவர். சனிக்கிழமை அவர் காலமானதாக, அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. சாம்பியன்ஸ் கோப்பைக்காக, லண்டனில் இருப்பதால் அஸ்வின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை. மறைந்த நாராயணசாமிக்கு ரவிச்சந்திரன் என்ற மகனும் ஒரு மகளும் மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.