இந்தியா: ரோகித் சர்மா, ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மனிஷ் பாண்டே அல்லது லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், டோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ்.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட் அல்லது மேக்ஸ்வெல், பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப், மேத்யூ வேட், ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா, ரிச்சர்ட்சன், கம்மின்ஸ், நாதன் கவுல்டர்-நிலே.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் மூன்று ஆட்டங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
முதல் 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த இந்திய அணியில் 4-வது ஆட்டத்திற்கு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பும்ரா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் ஆகிய பவுலர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு உமேஷ் யாதவ், முகமது ஷமி, அக்ஷர் பட்டேல் ஆகியோரை கேப்டன் விராட் கோலி களம் இறக்கினார்.
கடந்த ஆட்டத்தில் போராடி வீழ்ந்த இந்திய அணி, தொடரை தித்திப்புடன் முடிப்பதில் முழு உத்வேகத்துடன் இருக்கிறது. இதில் வெற்றி பெறும் போது தான், ஒரு நாள் போட்டி தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்க வைக்க முடியும்.

பெங்களூரு ஒரு நாள் போட்டியில் 71 ரன்களை விட்டுக்கொடுத்த வேகப்பந்து வீச்சாளர் 29 வயதான உமேஷ் யாதவுக்கு நாக்பூர் சொந்த ஊர் ஆகும்.

ஒரு நாள் போட்டியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவே அதிகம் விரும்புகிறேன். ஏனெனில் அதில் தான் திட்டமிடலை களத்தில் செயல்படுத்த கூடுதல் நேரம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் வரிசையாக மண்ணை கவ்வியதால் பலத்த விமர்சனத்திற்குள்ளானது. இப்போது பெங்களூரு ஆட்டத்தில் கிடைத்த வெற்றி அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கும்.
ஆரோன் பிஞ்ச் (ஒரு சதத்துடன் 218 ரன்), டேவிட் வார்னர் (ஒரு சதத்துடன் 192 ரன்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (126 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி உள்ளது. இவர்களை சீக்கிரம் சாய்த்து விட்டால் ஆட்டம் எளிதில் இந்தியா பக்கம் திரும்பிவிடும்.
மோசமான பார்ம் காரணமாக முந்தைய ஆட்டத்தில் கழற்றி விடப்பட்ட மேக்ஸ்வெல்லுக்கு இன்றும் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான். அதே சமயம் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.