ரவி சாஸ்திரியிடம் கேட்ட இந்திய கிரிக்கெட் வாரியம்

ஜூன் 20 இரவு அன்று பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே. இதனால், விராட் கோலிக்கு நெருக்கமானவரான ரவி சாஸ்திரியை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது. ஆனால், அந்த பதவி எனக்கு என்று உறுதி படுத்தினால் தான் நான் விண்ணப்பிப்பேன் என ரவி சாஸ்திரி கூறினார்.

“ஷாஸ்திரி தலைமையில் கேப்டன் விராத் கோஹ்லி விரும்புகிறார் என்று எந்த இரகசியமும் இல்லை. அவர் இன்டெர்வியூக்கு விண்ணப்பித்துள்ளார், ஆனால், தன் பதவியை பறித்த அதே இடத்திற்கு செல்ல விரும்பவில்லை. இந்த பதவி நிச்சயம் ஆனால் தான், இந்திய கிரிக்கெட் வாரியம் அல்லது கிரிக்கெட் நிர்வாக குழுவிடம் பேசுவேன் என கூறியுள்ளார்,” என்று பிசிசிஐ கூறியுள்ளது.

புது பயிற்சியாளர்கான பதவிக்கு விண்ணப்பதாரர்களை வரவைத்து இந்திய கிரிக்கெட் வாரியம். ஆனால், அப்போது அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்ததால், வெறும் ஆறு பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். கும்ப்ளேவுக்கும் கோலிக்கும் மோதல் என தகவல்கள் வந்தது, ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு அதெல்லாம் பொய் என விராட் கோலி கூறினார்.

அனில் கும்ப்ளே சிறப்பான பணியை செய்வதால், பல முன்னாள் வீரர்கள் விண்ணப்பிக்க வில்லை. அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த காலத்தில், 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 12 டெஸ்ட் போட்டியில் வெற்றி மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை கண்டது.

இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் தகராறில் விராட் கோலியே வெற்றி பெற்றார். இதனால், பயிற்சியாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் அனில் கும்ப்ளே.

பயிற்சியாளர் பதவியில் இருப்பவர் விராட் கோலிக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என விராட் கோலி எண்ணுகிறார். அதற்கு ரவி சாஸ்திரி தான் சரியானவர். கடந்த முறை பயிற்சியாளர்க்கான போட்டியில் கும்ப்ளேவுடன் மோதிய சாஸ்திரி, தோல்வி பெற்றார். விராட் கோலியின் ஆலோசனையை மீறாமல் சாஸ்திரியை பயிற்சியாளர் பதவிக்கு அழைப்பார்களா என பாப்போம்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.