தலைமை பயிற்சியாளர் இடம் காலி; சச்சின், லட்சுமண், கங்குலி ஆகியோர் விண்ணப்பித்தனர்

இன்னும் ஒரு வாரத்தில் இங்கிலாந்தில் 8வது சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடர் நடக்கவுள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன், அதிர்ச்சி தகவலை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ). இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பதாரர்களை அழைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 1 வருட தலைமை பயிற்சியாளர் பதவி, அணில் கும்ப்ளேவுக்கு முடிவுக்கு வருகிறது.

அவரை நேரடியாக தலைமை பயிற்சியாளர் பதவி பெற்றாலும், விண்ணப்பத்தை சச்சின் டெண்டுல்கர், முன் வைக்க வேண்டும். வேட்பாளர் பட்டியலை நிரப்ப சச்சின் டெண்டுல்கருடன், சவுரவ் கங்குலி மற்றும் வி.வி.ஸ். லட்சுமண் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.

விருப்பம் இருப்பவர்கள் மே 31, 2017-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

அணில் கும்ப்ளேவின் சிறப்பான பயிற்சியாளர் பயணம் முடிவுக்கு வருகிறது. அவர் பயிற்சியாளராக இருக்கும் பொழுது, 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்று, 1 தோல்வி மற்றும் 4 போட்டி ட்ராவில் முடிந்திருக்கிறது.

ஒரு வருடத்திற்கு முன்பு ரவி சாஸ்த்ரியை வீழ்த்தி இந்த பதவியை பிடித்தார் அணில் கும்ப்ளே.

இந்திய வீரர்களிடம் யார் வேண்டும் என்று கேட்ட போது, விராட் கோலியும் ரவி சாஸ்த்ரி பெயரை தான் கூறினார். ஆனால், அந்த போட்டிக்கு வந்த முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே, பதவியில் உட்கார்ந்தார்.

முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், இந்தியா A மற்றும் அண்டர்-19 அணிக்கு பயிற்சியாளராக இருப்பதால், இதில் ஆர்வம் காட்டமாட்டார் என தெரிகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.