மோசமான சாதனையை வேதனையையுடன் பதிவு செய்தார் சாஹல்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் ரன்களை வாரி வழங்கியதன் மூலம் இந்திய அணியின் சாஹல் மோசமான சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரராகியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தென் ஆப்ரிக்காவிற்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிதறடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் ஒருவரின் பந்து கூட எடுபடாவிட்டாடுலும், குறிப்பாக சாஹல் 4 ஓவரில் 64 ரன்களை வாரி வழங்கி தென் ஆப்ரிக்கா அணிக்கு வெற்றியை இலகுவாக்கி தந்தார். இவர் வீசிய 24 பந்துகளில் 7 சிக்ஸர்களை தென் ஆப்ரிக்கா வீரர்கள் பறக்கவிட்டனர்.
இதன் மூலம் சர்வதேச டி.20 அரங்கில் தான் வீசிய 4 ஓவரில் 7 சிக்ஸர்களுக்கு மேல் விட்டு கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார்.
இது தவிர 7 சிக்ஸர்களுக்கு மேல் விட்டு கொடுத்த 5 வது வீரர் என்ற வேதனையான சாதனையையும் சாஹல் படைத்துள்ளார்.
இதே போல் இதற்கு முன்னதாக 7 சிக்ஸர்கள் மேல் விட்டு கொடுத்த வீரர்கள் பட்டியல்;
பிராட் v இந்தியா – 2007
டோஹத்ரி v விண்டீஸ் – 2012
மெக்ராத்தி v ஆஃப்கானிஸ்தான் – 2017
ஆண்ட்ரியூ டை v நியூசிலாந்து – 2018