தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கின்றது. இந்த தொடரில் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இருக்கும் முதல் 8 அணிகள் விளையாடுகிறது.
இந்நிலையில் ஜூன் 3-ஆம் தேதி தென்னாப்ரிக்காவும் இலங்கை அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் இலங்கை அணி கேப்டன் ஏஞ்சலோ மத்தியூஸ் கன்று காயத்தால் அவதி படுவதால், தென்னாப்ரிக்காவுக்கான எதிரான போட்டியில் விளையாடுவது சந்தேகம். இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியம் மே 31-ஆம் தேதி உறுதி படுத்தியது.
அப்படி தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஏஞ்சலோ மத்தியூஸ் விளையாடவில்லை என்றால், அது இலங்கை அணியை தான் பாதிக்கும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அனுபவம் உள்ள மத்தியூஸ் இல்லாதது, இலங்கை அணியை பாதிக்கும்.
இந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்கா தொடரின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இதனால், அடுத்து தென்னாபிரிக்கா அணியுடன் விளையாடிய இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவில்லை. அதன் பிறகு, ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய டி20 தொடர், வங்கதேசத்துடன் விளையாடிய டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் அவர் பங்கேற்க வில்லை.
இதனால், காயம் சரியான பிறகு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்று சிறந்த பார்மில் இருந்தார். அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் முதல் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக 106 பந்துகளில் 95 ரன் அடித்தார். ஆனால், நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடவில்லை.
இதனால், ஜூன் 3 அன்று தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் மத்தியூஸ் விளையாடவில்லை என்றால், உபுல் தரங்கா கேப்டனாக செயல் படுவார் என தெரிகிறது.