அதே அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பயங்கரமான ஒரு அணி தான் சென்னை சூப்பர் கிங்ஸ். இரண்டு வருடம் தடைக்கு பிறகு மீண்டும் அந்த அணி 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ளது. இதனால், 2016, 2017க்கு முன் வைத்திருந்த அதே அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்து கொள்ள முடியுமா என்று தான் கேள்வி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இயக்குனர் ஜார்ஜ் ஜான், அதே அணியை தக்கவைத்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேசி கொண்டிருப்பதாக கூறினார்.

“2018 ஐபில் பற்றி பிசிசிஐ-யிடம் பேசி கொண்டிருக்கிறோம். அதே அணியை தக்கவைத்து கொள்ள கோரிக்கை வைத்துள்ளோம். இருக்கும் இரண்டு அணிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் பணக்கார அணி. இதனால், முதலில் வாய்ப்பு எங்களுக்கு தான் வரும். இது எங்களுக்கு சாதகமாக தான் இருக்கும்,” என ஜார்ஜ் ஜான் கூறினார்.

“இரண்டு வருடத்திற்கு முன் வைத்திருந்த அதே அணியை கேட்டுளோம். அதே அணி கிடைத்தால், அந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைத்த வரம் தான்,” என அவர் மேலும் கூறினார்.

2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருவது உறுதி ஆகிவிட்டது, ஆனால் அந்த அணி மீண்டும் தோனியை வாங்குவார்களா என்பது தான் சந்தேகமாக உள்ளது.

எனினும், வீரர்களை தக்கவைத்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் முதலில் தோனியை தான் தக்கவைத்து கொள்வோம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூறியது. அடுத்த ஐபில்-க்கு பல மாதங்கள் உள்ளதால், இனி வரும் செய்திகள் சுவாரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.