ஊடங்கங்கள் தவறாக செய்திகள் தருவதால் ஊடங்கங்களை விமர்சித்தார் சுழற்-பந்து வீச்சாளர்ஹர்பஜன் சிங்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய அணியில் தோனிக்கு மட்டும் சலுகைகள் உண்டு, எனக்கு ஏன் இல்லை என இந்திய சுழற்-பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பினார் என NDTV தகவலை பரப்பியது.
“அவர் பார்மில் இல்லை என்றாலும், இந்தியாவிற்காக நிறைய செய்திருக்கிறார். ஆனால், தற்போது அவர் பந்தை சரியாக அடிப்பது இல்லை,” என கூறினார்.
“ஆனால், எனக்கு எந்த சலுகையும் அளிப்பதில்லை. நாங்கள் 19 வருடமாக இந்தியாவிற்கு விளையாடியுள்ளோம், சில போட்டிகளில் வெற்றியும் சில போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளோம். நானும் இரண்டு உலக கோப்பைகளை வென்றுள்ளேன். ஆனால், எனக்கு மட்டும் ஏன் இந்த சலுகைகள் இல்லை,” என ஹர்பஜன் சிங் கேள்வி கேட்டார்.
ஆனால், இதை நான் கூறவில்லை, ஊடங்கங்களே பொய்யான தகவல்களை பரப்புகிறது என ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
1/3 Dear media plz don't misquote all the time. Any1 who wants 2know what exactly I said in that interview please go & see the entire video. pic.twitter.com/aatVC4wxzM
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 26, 2017
தோனி எனக்கு நெருங்கிய நண்பர் எனவும் கூறியிருந்தார்.
2/3 MSD is a dear friend &a great player, I never doubted his selection so please don't quote me on things which I never said against him
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 26, 2017
கடைசி ட்வீட்டில் ஊடங்கங்களை கிழித்து எறிந்தார்.
3/3 just to run ur sites n create 'sensatiinonal stories' don't misquote & run out of context to harm someone elses image.
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 26, 2017
ஹர்பஜன் சிங், கடைசியாக 2016-இல் டி20 உலக கோப்பையில் ஐக்கிய அரபு நாட்டுக்கு எதிராக விளையாடினார். சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கான 15-பேர் கொண்ட இந்திய அணியில் கூட அவர் இடம் பெற வில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடிப்பதற்கு கூட போராடுகிறார்.
கடைசி நேரத்தில் கரண் சர்மா நன்றாக பந்து வீசியதால், தகுதிச்சுற்று மற்றும் இறுதி போட்டிகளில் ஹர்பஜனுக்கு பதிலாக கரண் ஷர்மாவே விளையாடினார்.
இந்தியன் பிரீமியர் லீக் 10வது தொடரில் அவர் விளையாடிய 11 போட்டிகளில் 8 விக்கெட் எடுத்தார்.