கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போஹ்லே தன் ட்விட்டர் பக்கத்தில் ” அணில் கும்ப்ளேவின் விலகல் இந்திய அணிக்கு ஒரு முக்கிய இழப்பு” என்று கூறியுள்ளார்.
நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார் முன்னாள் இந்திய வீரர் அணில் கும்ப்ளே.இந்திய கேப்டன் விராட் கோலிக்கும், பயிற்சியாளர் அணில் கும்ப்ளேவுக்கும் சண்டை முத்திவிட்டது என விராட் கோலிக்கும் – கிரிக்கெட் நிர்வாக குழு இடையேயான கூட்டத்தில் தெரிய வந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போதே விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் அணில் கும்ப்ளேவுக்கும் மோதல் என தகவல்கள் வந்தது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்ட நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே இந்த முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
சென்ற வருடம் ஜூன் மாதத்தில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக சேர்க்க பட்டர், இவர் இவர் தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் நியூஸிலாந்து இடம் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது,பிறகு இங்கிலாந்து அணியை 4-0 என்ற கணக்கிலும்,வங்கதேசம் அணியை 1-0 என்றும், ஆஸ்திரேலியா அணியை 3-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது.இது மட்டும் இல்லாமல் இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம் வெற்றி பெற்றது.
இவரின் பயிற்சி காலம் சாம்பியன் ட்ரோபி போட்டிகளோடு முடிவு அடைந்து உள்ளது ஆனால் இவருக்கு பிசிசிஐ இன்னும் சிறிது காலம் நீட்டிப்பு அளித்தது ஆனால் கும்ப்ளே அதை நிராகரித்து விட்டார்.
இதனால் இவரின் இழப்பு இந்திய அணிக்கு சரியானது இல்லை என தன் ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போஹ்லே பதிவிட்டு உள்ளார்.