மாஸ் பன்னிட்டார் தோனி : ரோகித் பெருமிதம்

வழக்கமாக சிறப்பாக விளையாடும் தோனி, இந்தப் போட்டியில் மிரட்டி விட்டார்’ என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

இலங்கைக்கு எதிராக கட்டாக்கில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் 48 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். தோனி 22 பந்துகளில் 39 ரன்களும் மணிஷ் பாண்டே 18 பந்துகளில் 32 ரன்களும் ஆட்டமிழக்காமல் எடுத்தார். பின்னர் விளையாடிய இலங்கை அணி 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சேஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் குல்தீப் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

பின்னர் பேசிய கேப்டன் ரோகித் சர்மா, ‘இந்தப் போட்டியில் தோனி மிரட்டலாக ஆடினார். பல போட்டிகளில் விளையாடி அணியின் வெற்றிக்கு பங்காற்றியவர் தோனி. போட்டியை முடித்துவைப்பதில் வல்லவர். இந்தப் போட்டியிலும் சிக்சர் அடித்து முடித்தது சிறப்பு. நான்காவது வீரராக களமிறங்கி அவர் சரியாக விளையாடினார். அந்த இடத்துக்கு அவர்தான் பொருத்தமானவர். மனீஷ் பாண்டேவும் சிறப்பாக ஆடினார். அணியில் இடம் கிடைத்தும் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்த கே.எல்.ராகுல் இந்தப் போட்டியில் தன்னை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அவர் அருமையாக அடித்து ஆடினார். குல்தீப்பும் சேஹலும் விக்கெட் வீழ்த்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். அவர்களைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அணிக்கு என்ன தேவை என்பதை சரியாக கணித்து  ஆடுகிறார்கள். ஆடுகளத்தில் பனியின் தன்மை இருந்தாலும் பாண்ட்யா, பும்ரா உட்பட அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர்’ என்றார். 

 

டாஸ் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்று நான் ஆரம்பத்திலேயே கூறினேன். ஆட்டம் முழுதும் பனிப்பொழிவு இருந்தது. 40 ஓவர்களும் பனிப்பொழிவு உண்டு என்று எதிர்பார்த்தோம். மாற்றம் எதுவும் இல்லை. இன்னிங்ஸின் பின் பகுதியில் பேட் செய்வது கடினமாக அமைந்தது.

தொடக்கத்தில் பேட்டிங் அவ்வளவு கஷ்டமாக இல்லை. ராகுலைத் தொடக்கத்தில் களமிறக்கியது நல்ல உத்தியாக அமைந்தது. ஒருநாள் தொடரில் ராகுல் இல்லை, ஆனால் இங்கு வந்து தான் அந்த அணியில் இருந்திருக்க வேண்டும் என்பதை நிரூபித்தார்.

தோனி, பாண்டே அருமையாக இன்னிங்ஸை முடித்தனர். நடுவில் பாண்டேவுக்கு சரியாக பேட்டிங் கிடைக்கவில்லை, எனவே இங்கு வந்து இவ்வாறு ஆடியது அருமையானது. தோனி கிளாஸ். 4-ம் நிலை அவருக்கு உண்மையில் சாதகமாக உள்ளது.

அவர் நமக்காக ஏகப்பட்ட போட்டிகளில் ஆடியுள்ளார். ஏகப்பட்ட போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். எனவே நாங்கள் அவர் 4-ம் நிலையில் பேட் செய்ய விரும்புகிறோம். இதனால் மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள், மேலும் தோனி நீண்ட காலமாக போட்டிகளை வெற்றிகரமாக பினிஷ் செய்து கொடுத்துள்ளார், இப்போது அவர் 4-ம் நிலையில் இறங்கி சுதந்திரமாக ஆட வேண்டும், நெருக்கடி, அழுத்தமில்லாமல் அவர் ஃப்ரீயாக ஆட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

கடினமான பனிப்பொழிவில் சாஹல், குல்தீப் யாதவ் அருமையாக வீசினர்.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

Editor:

This website uses cookies.