இன்னும் எதுவும் முடியல... இது வெறும் ஆரம்பம் தான்; நியூசிலாந்தை அசால்டாக காலி செய்தது குறித்து பேசிய ரோஹித் சர்மா !! 1
இன்னும் எதுவும் முடியல… இது வெறும் ஆரம்பம் தான்; நியூசிலாந்தை அசால்டாக காலி செய்தது குறித்து பேசிய ரோஹித் சர்மா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை தொடரின் 21வது போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இன்னும் எதுவும் முடியல... இது வெறும் ஆரம்பம் தான்; நியூசிலாந்தை அசால்டாக காலி செய்தது குறித்து பேசிய ரோஹித் சர்மா !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரியல் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு விராட் கோலி 95 ரன்களும், ரோஹித் சர்மா 46 ரன்களும், ஜடேஜா 39* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 48வது ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியும் பெற்றது.

இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, பந்துவீச்சாளர்களையும், விராட் கோலியையும் பாராட்டி பேசியுள்ளார்.

இன்னும் எதுவும் முடியல... இது வெறும் ஆரம்பம் தான்; நியூசிலாந்தை அசால்டாக காலி செய்தது குறித்து பேசிய ரோஹித் சர்மா !! 3

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “உலகக்கோப்பை தொடரில் எங்களது பாதி வேலை தான் தற்போது நிறைவடைந்துள்ளது. எஞ்சியுள்ள போட்டிகளில் முழு கவனத்தை செலுத்துவோம். மற்ற விசயங்களை பற்றி பெரிதாக யோசிக்காமல் நடப்பு தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் மீது மட்டுமே கவனம் செலுத்துவோம். முகமது ஷமி தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டார். முகமது ஷமி அனுபவமிக்க வீரர். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 300 ரன்களை கடந்துவிடும் என்றே நினைத்தோம், ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை மிக சரியாக செய்து கொடுத்தனர். நியூசிலாந்து அணியுடனான இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. விராட் கோலி கடந்த பல வருடங்களாகவே இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்து வருகிறார். விராட் கோலியும், ஜடேஜாவும் இந்த போட்டியில் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் நாங்கள் பீல்டிங்கில் சரியாக செயல்படவில்லை என்பதே உண்மை. உலகின் நம்பர் 1 பீல்டரான ஜடேஜாவும் இந்த போட்டியில் கேட்ச்சை தவறவிட்டார், ஆனால் இது போன்று நடைபெறுவது இயல்பானது தான். இதே போன்று அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *