என்ன ஆனாலும் இவர மட்டும் விட்றாதீங்க... இவர் இருந்தால் ஆஸ்திரேலியாவில் அசால்டாக 200 ரன்கள் அடிக்கலாம்; நெஹ்ரா சொல்கிறார் !! 1

தினேஷ் கார்த்திக் போன்ற ஒரு வீரர் இந்திய அணியில் இருந்தால் 200 ரன்களாக இருந்தாலும் சேஸ் செய்துவிடலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹரா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.

என்ன ஆனாலும் இவர மட்டும் விட்றாதீங்க... இவர் இருந்தால் ஆஸ்திரேலியாவில் அசால்டாக 200 ரன்கள் அடிக்கலாம்; நெஹ்ரா சொல்கிறார் !! 2

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியிலும் டாஸை வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி, கடந்த நான்கு போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பந்துவீச்சை தேர்வு செய்தது.

என்ன ஆனாலும் இவர மட்டும் விட்றாதீங்க... இவர் இருந்தால் ஆஸ்திரேலியாவில் அசால்டாக 200 ரன்கள் அடிக்கலாம்; நெஹ்ரா சொல்கிறார் !! 3

 

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பையொட்டி நடைபெற்ற இந்த போட்டி இந்திய அணி பேட்டிங் செய்யும்போது ஏற்பட்ட மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது.

என்ன ஆனாலும் இவர மட்டும் விட்றாதீங்க... இவர் இருந்தால் ஆஸ்திரேலியாவில் அசால்டாக 200 ரன்கள் அடிக்கலாம்; நெஹ்ரா சொல்கிறார் !! 4

மழை நின்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் மழைபொழிவு விடாததால் போட்டி  பாதியிலேயே நிறுத்தப்பட்டது, இதன் காரணமாக 2-2 என இந்த தொடர் சமன் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் மற்றும் ஆவேஸ் கான் ஆகியோரை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

குறிப்பாக கடின உழைப்பிற்கு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து தனது பங்களிப்பை சரியாக செய்து வரும் தினேஷ் கார்த்திக்கை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வியந்து பாராட்டி வருகிறது.

என்ன ஆனாலும் இவர மட்டும் விட்றாதீங்க... இவர் இருந்தால் ஆஸ்திரேலியாவில் அசால்டாக 200 ரன்கள் அடிக்கலாம்; நெஹ்ரா சொல்கிறார் !! 5

அந்தவகையில், தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான பார்ம் குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா, டி.20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைத்தால் எப்பேர்பட்ட ரன் சேஸாக இருந்தாலும் இந்திய அணியை வெற்றி பெற. செய்வார் என்று பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து ஆஷிஷ் நெஹ்ரா பேசுகையில், “தற்பொழுது ஹர்திக் பாண்டியா ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்து அசத்துகிறார், அதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அவரால் முன்கூட்டியே களமிறங்கி டேட்டிங் செய்யவும் முடியும் அவரை போன்ற அனுபவமான வீரர்கள் மத்தியில் இது போன்ற விஷயங்களை அதிகமாக எதிர்பார்க்கலாம், இதனால் நிச்சயம் அவரை அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும், கடைசி 3 அல்லது 4 ஓவரில் இவரால் அதிரடியாக செயல்பட முடியும், ஆனால் இவருக்கு அதைவிட தனித்துவமான திறமைகளும் உண்டு இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்திய அணித் தேர்வாளர்கள் இவரை இந்திய அணி இணைக்க வேண்டும்.உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் ரவீந்திர ஜடேஜா மற்றும் தினேஷ் கார்த்திக் போன்றோரின் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு தேவை, இவர்களை போன்ற அனுபவமான திறமை படைத்த வீரர்கள் 200 ரன்களாக இருந்தாலும் எளிதாக சேஸ் செய்து வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள்” என்று ஆஷிஷ் நெஹரா பாராட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *