Cricket, India, Sri Lanka, Vijay Shankar

காயங்கள் இல்லை என்றால் இதற்கு முன்னதாகவே இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் தமிழகத்தின் ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கர். கடந்த வருடம் ஜூனியர் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் விளையாடிய சென்றார், ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டதால் அந்த தொடரில் இருந்து அவர் விலகினார்.

India Vs SL, Hardik Pandya, Match Winner, Sourav Ganguly, Men in Blue

அதே அணியில் ஹர்டிக் பாண்டியாவும் இடம் பிடித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவரை தேர்வு செய்த போது, அவர் கடந்த நவம்பர் மாதம் ஜூனியர் இந்திய அணிக்காக விளையாடினார். இதனால், விஜய் ஷங்கர் காயத்தில் இருந்ததால், ஆல்-ரவுண்டர் இடத்திற்கு விஜய் ஷங்கருக்கு பதிலாக ஹர்டிக் பாண்டியவை தேர்வு செய்தார்கள்.

ஆனால் இப்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஹர்டிக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டதால், விஜய் ஷங்கருக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இதனால், இந்திய அணியில் விஜய் ஷங்கருக்கு இடம் கிடைத்துள்ளது.

“நான் எதிர்பார்க்கவே இல்லை, சந்தோசமாக இருக்கிறது. நான் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடினாலும், என்னால் முடிந்ததை செய்யவேண்டும் என்று தான் நினைப்பேன். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினால், அடுத்த லெவலுக்கு போகலாம் என ஒரு நாள் கூட நினைத்ததில்லை. என் கனவு இப்போது நினைவாகி விட்டது. இந்திய ட்ரெஸ்ஸிங் அறையில் முதல் முறையாக இருக்க காத்திருக்கிறேன்,” என விஜய் ஷங்கர் கூறினார்.

இந்தியா vs இலங்கை 2017: என் கனவு நினைவாகியது - விஜய் ஷங்கர் 1

தமிழ்நாட்டை சேர்ந்த விஜய் ஷங்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடி உள்ளார். ஆனால், உள்ளூர் போட்டிகள், ஜூனியர் இந்திய அணி என படிப்படியாக தான் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

இது வரை இந்த வருடம் அவருக்கு நல்ல வருடம் தான். விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாட்டின் கேப்டனாக இருந்த விஜய் ஷங்கர், பெரோஷா கோட்லா மைதானத்தில் இறுதி போட்டியில் குறைவான ரன் அடித்தும் பெங்கால் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றார். அதன் பிறகு தென்னாப்ரிக்காவுக்கு ஜூனியர் இந்திய அணியுடன் சென்றார், ஆனால் காயம் அவருடைய நண்பர் என்பதால், ஷங்கரை பார்க்க காயம் தென்னாப்ரிக்காவுக்கே வந்தது.

ஆனால், நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஜூனியர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர், ரஞ்சி டிராபியிலும் சிறப்பாக விளையாடினார். இதனால் தான், புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக இவரை தேர்வு செய்தார்கள்.

பேட்டிங் ஆல்-ரவுண்டராக இருக்கும் விஜய் ஷங்கர், ஹர்டிக் பாண்டியா வீசும் வேகத்தில் வீசுவதில்லை, இதனால் வேகத்தை அதிகப்படுத்த இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜியிடம் (தமிழக அணியின் பயிற்சியாளர்) பயிற்சி எடுத்து வருகிறார்.

“நான் வேகமாக வீச பழகிக்கொண்டேன். அதை எப்படி செய்யவேண்டும் என்று லட்சுமிபதி பாலாஜி கற்று கொடுத்தார்,” என விஜய் ஷங்கர் கூறினார்.

இந்திய அணியில் ஏற்கனவே இஷாந்த் சர்மா இருப்பதால், அடுத்த போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக இஷாந்த் சர்மா விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதனால், இந்திய அணிக்காக விளையாட விஜய் ஷங்கர் காத்திருக்கதான் வேண்டும். ஷிகர் தவானையும் இந்திய அணி வெளியே விட்டதால், மீண்டும் தொடக்க வீரராக முரளி விஜய் களமிறங்குவார். இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நவம்பர் 24ஆம் தேதி தொடங்குகிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *