தற்போது இந்திய அணி இலங்கை அணியிடம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையிலேயான முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தாலும், டெல்லியை சேர்ந்த ஷிகர் தவான் இரண்டாவது இன்னிங்சில் 94 ரன் அடித்து நல்ல தொடக்கம் தந்தார் மற்றும் சீரான இடைவெளியில் இந்த போட்டியில் 8 விக்கெட் எடுத்து புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார்.
இந்த சுற்றுப்பயணத்தின் அடுத்த டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நவம்பர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆனால், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து வெளியே விட்டது இந்திய அணி. இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் பதிவிடியாது.
நவம்பர் 23ஆம் தேதி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு மீருட்டில் திருமணம் நடக்கவுள்ளதால் அவர் இந்திய அணியின் தேர்வாளர்களிடம் அனுமதி கேட்டார், இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்தது. கூடுதலாக இந்திய அணியின் தொடக்கவீரர் ஷிகர் தவான் அவரது தனிப்பட்ட காரணத்திற்காக இந்திய அணியிடம் அனுமதி கேட்டார், இதனால் அவருக்கும் அனுமதி கொடுத்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக உள்ளூர் போட்டிகளில் கலக்கி வரும் தமிழக வீரர் விஜய் ஷங்கர் அணியில் இடம் பிடித்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய தேர்வாளர்களிடம் அனுமதி கேட்ட ஷிகர் தவான், மூன்றாவது போட்டிக்கு மீண்டும் அணிக்கு திரும்பலாம். இந்த செய்தியையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் பதிவிட்டது.