இந்திய வெற்றி, இலங்கை குபீர்!!
இந்தியா இலங்கை இடயிளான ஒரே ஒரு ட்20 போட்டி நேற்று கொலும்புவில் உள்ள பிரேமதாச மைதானத்தில் துவங்கியது. மழை கரணமாக முதல் அரை மணி நேரம் ஆட்டம் தடை பட்டது.
டாஸ் வென்ற கேப்டன் விராத் கோலி இலங்கையை பேட்டிங் செய்ய பணித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்கவீரர் கேப்டன் தரங்கா 5 ரன்னில் வெளியெற, அடுத்து வந்த முனவீரா அதிரடியாக விளையாடினார். அவர் 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.
இலங்கையின் நடுவரிசையை சஹால் சொற்ப ரன்களில் வெளியேற்ற, அந்த அணி மீண்டும் திணறியது. எனினும் இறுதியில் அதிரடியாக ஆடியதால் 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்தது இலங்கை.
இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய அஷான் பிரியஞ்சன் 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது.
9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இதனையடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி இலங்கை அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர்.
19.2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் கோலி(82) இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து 4 அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
கேப்டன் விராத் கோலி ஆட்டனாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்தியா அபாரம்
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 எனவும் ஒருநாள் தொடரை 5-0 எனவும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிரான அனைத்து தொடரையும் வென்று ஒயிட் வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியிலும் வெற்றி பெறுவதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான மொத்த தொடரையே ஒயிட் வாஷ் செய்த பெருமையை இந்தியா பெறுகிறது.