இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேனான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை (நவ்.02) டெல்லியின் ஃபெரொஸ் ஷா கோட்லா மைதானத்தில் துவங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியானதால் இந்த போட்டியை வெறு தொடரை கைபற்றி மீண்டும் முத்திரை பதிக்க இந்திய அணி காத்திருக்கிறது.
மேலும், முதல் இரண்டு போட்டியிலும் ஏமாந்து போன இலங்கை அணி இந்த மூன்றாவது போட்டியில் ஆவது வெற்றி பெற்று இழந்த மாண்பினை மீட்க போராடும் வகையில் பயிற்சி செய்து வருகிறது.
தற்போது இந்த போட்டிகான இந்தியாவின் கணிக்கப்பட்ட அணியைப் பார்ப்போம் :
1.முரளி விஜய்
சிகர் தவான் அணிக்கு திரும்பி இருந்தாலும் முந்தையை போட்டியில் சதம் அடித்து அசத்திய முரளி விஜக்கு வாய்ப்பு கொடுக்க விராட் கோலி முனைவார். அந்த தருணத்தில் சிறந்த முடிவை எடுப்பதே கேப்டனின் நோக்கமாக இருக்க வேண்டும். இதனால் துவக்க ஆட்டக்காரராக புதிய பந்தினை முரளி விஜய் எதிர்கொள்வார்.
