இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 15வது சீசன், கொரோனா விதிமுறைகள் காரணமாக, மொத்த போட்டிகளும் மும்பை ஆடுகளங்களில் வைத்து நடத்தப்பட்டன.
15வது தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டதால் மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட நெடுந்தொடராக நடத்தப்பட்டது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் மற்ற அனைத்து அணிகளையும் விட மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்று, தனது முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது
இந்தத் தொடரில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் பல அரங்கேறி உள்ளது,அந்த வகையில் அதிக தூரம் சிக்சர் அடித்த 5 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
5,நிக்கோலஸ் பூரன்
கடந்த ஆண்டு மிக மோசமாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 2022 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டார். இந்திய மைதானங்களை கணித்து ஆடக் கூடிய திறமை படைத்த இவர் இந்த தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக டெல்லி அணிக்கு எதிரான 50வது போட்டியில் 34 பந்துகளில் 64 ரன்கள் அடித்து அசத்திய இவர், அன்றிச் நோர்ட்சே வீசிய டாஸ் பாலை 108 மீட்டர் சிக்சர் அடித்து இந்தப் பட்டியலில் 5 வது இடத்தை பிடித்துள்ளார்.