வேகத்தில் சென்னை அணியை திணறடித்த டெல்லி வீரர்கள்… கடைசி ஓவரில் வெறித்தனமான சம்பவம் செய்த தல தோனி; டெல்லி அணி மிரட்டல் வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 13வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
விசாகப்பட்டிணம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 52 ரன்களும், ரிஷப் பண்ட் 51 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 1 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரஹானே பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 45 ரன்களும், டேரியல் மிட்செல் 34 ரன்களும் எடுத்தனர். இதன்பின் களமிறங்கிய சமீர் ரிஸ்வி 1 ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். இதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே ஆகியோர் முக்கியமான நேரத்தில் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க தவறினர். சிவம் துபே 17 பந்துகளில் 18 ரன்கள் 17 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.
இதன்பின் களத்திற்கு வந்த சென்னை அணியின் கதாநாயகனான தல தோனி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மாஸ் எண்ட்ரீ கொடுத்தாலும் முகேஷ் குமாரின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 40 ரன்கள் தேவை என்ற எட்டமுடியாத நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரை எதிர்கொண்ட தல தோனி 2 பவுண்டரி 2 மிரட்டல் சிக்ஸர்கள் அடித்து கடைசி ஓவரில் 20 ரன்கள் குவித்தாலும் 20வது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.