டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அபரிவிதமான வேகமான வளர்ச்சி பெற்று வருகிறார். அதற்க்கு சான்றே ஜடேஜா தற்போது டெஸ்ட் போட்டிகளில் நெ.1 ஆல் ரவுண்டராக இடம் பிடித்துள்ளது. தற்போது ஜடேஜா தான் கிரிக்கெட் உல்கின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் . சாகிப் அல் ஹாசனை முந்தி தற்போது முதன் முறையாக நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இடம் பிடித்துள்ளார். மேலும் அவர் நெ.1 பந்து வீச்சாளராகவும் இடம் பிடித்தவர் ஆவார்.
இந்தியா இலங்கை இடயேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இக்கட்டான கட்டத்தில் எல்லாம் கேப்டன் விராட் கோலியின் பக்கபலமாக நின்று தேவையான பொழுதெல்லாம் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார். பின் அந்த டெஸ்டில் இந்தியா அபாரமாக இன்னிங்க்ச் மற்றும் 53 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், இலங்கையை முதல் இன்னிங்சில் தனது பேட்டிங்காள் ஒரு சாத்து சாத்தி 78 ரன்கள் எடுத்து ஜடேஜா இரண்டாவது இன்னிங்சில் தனது சுழ்ற்ப் பந்து வீச்சால் இலங்கை அணியை சுத்தலில் விட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது போன்ற சிறப்பான் செயல்பாடுகளால் கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக நம்பர் ஒன் ஆல்ரவுண்டராக இடம் பிடித்துள்ளார் ஜடேஜா . அஷ்வினும் அவருக்கு சலைக்காமல் 418 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளார் . அஷ்வின் முன்னால் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் ஆவார்.
இந்திய மண்ணில் நடந்து வந்த இந்த சீசனின் 13 டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அந்த 13 டெஸ்ட்களில் இந்தியா தற்போது 10 டெஸ்ட்களில் வெண்ருள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் பேட்டிங்கிலும் 13 டெஸ்ட் போட்டிகளில் 556 ரன்களை கீழ் வரிசையில் ஆடி குவித்துள்ளார். முன்னர் நெ.1 பவுலராக இருக்கும் ஜடேஜா தறொபது நெ.1 ஆல் ரவுண்டராகி உலக கிரிக்கெட்டை கலக்கி வருகிறார். தனது திறமைக்கும் கடின உழைப்பிற்க்கும் கிடத்த வெற்றியாக நினைத்து கொண்டாடி வருகின்றார்.
தனது இந்த கிரிக்கெட் பயணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்திய அவர், இந்த சாதனைக்கு காரணம் முன்னாள் கேப்டன் மஹேந்த்ர சிங் தோனி மற்றும் தற்போத்ய கேப்டன் விராட் கோலி என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஜடேஜா தனது 19 வயதில் இந்திய அணியில் நுழைந்த போது எத்தனை போட்டிகள் அவர் சரியாக ஆடவில்லை என்றாலும் அவருக்கு உருதுணையாக இருந்து அவரை அணியில் தக்க வைத்து அவரை வளர்த்து விட்டவர் தோனி என்பது குறிப்பிடத்த்ககது.