Cricket, Jammu & Kashmir, BCCI, Ranji Trophy

இந்திய கிரிக்கெட் வாரியம் பணம் கொடுக்காததால், அடுத்த ரஞ்சி கோப்பையில் இருந்து ஜம்மு & காஷ்மீர் அணி விளையாடாமல் விலக போவதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த வருடம் ஜூலை மாதத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பணம் வேண்டும் என கோரிக்கை இட்டது ஜம்மு & காஷ்மீர் கிரிக்கெட் வாரியம். இதனால், ஜம்மு & காஷ்மீர் அணி 34 கோடி உபயோகிக்கலாம். ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

ஜம்மு & காஷ்மீர் அணியில் செயலாளர் இக்பால் ஷா, இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் உதவி கேட்டிருந்தார், ஆனால் இதுவரை எந்த உதவியையும் பெறவில்லை.

“பி.சி.சி.ஐ., யில் எல்லோருக்கும் எழுதினோம், ஆனால் தற்காலிக தேதி, எந்த பதிலும் வரவில்லை. இங்கே நான் கிரிக்கெட்டை எப்படி நடத்துவது என்று சொல்லுங்கள். அடுத்த மாதம் (ரஞ்சி ட்ரோபி) தொடர் தொடங்குகிறது. இங்கே தேர்வு சோதனைகள் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஒரு பையன் ஜம்முவிலிருந்து வந்தால், நான் எங்கே போவேன்? தினசரி வரப்போகும் செலவுக்கு யார் பணம் கொடுப்பார்கள்? அப்படி என்றால், நாம் ஒரு கடுமையான கிரிக்கெட்டை சமாளிப்பதை தவிர வேறெதுவும் இல்லை,” என ஷா கூறியிருந்தார்.

“கிரிக்கெட்டை நடத்துவது சாதாரண விஷயம் அல்ல. ஒரு கிரிக்கெட் வாரியத்தை நடத்த ஒரு ஆண்டிற்கு 6 – 7 கோடி வேண்டும். ஆனால், இந்த முறை பணம் இல்லாததால், ரஞ்சி டிராபியில் கலந்து கொள்ள முடியாது. ரஞ்சி டிராபியில் இருந்து விலகுவதை தவிர வேறு என்ன வழி இருக்கிறது என நீங்களே கூறுங்கள்,” என ஷா மேலும் கேள்வி கேட்டார்.

 

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *