கேதார் ஜாதவ் தான் நான்காவது விக்கெட்டாக களம் இறங்க வேண்டும் : ட்ராவிட்

இந்திய அணியில் 4வது மற்றும் 5வது விக்கெட்களாக யுவராஜ் சிங் மட்டும் தோனி களத்தில் இறங்குவார்கள்.இந்த ஜோடி சாம்பியன் ட்ரோபியில் பெரிதாக எதிர்பார்க்க பட்டார்கள் ஆனால் இவர்கள் சாம்பியன் ட்ரோபில் சரியாக விளையாடவில்லை இந்திய அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கொடுத்தார்கள்.

இவர்கள் 4வது மற்றும் 5வது இடத்தில களம் இறங்குவார்கள் இவர்களை தொடர்ந்து ஜாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டிய களம் இறங்குவார்கள் இவர்களுக்கு தங்கள் திறமைகளை வேலிக்காட்டும் வகையில் பேட்டிங் பிடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தோனி மற்றும் யுவராஜ் ஜோடியை விட ஜாதவ் மற்றும் பாண்டியா ஜோடிகள் சிறப்பாக விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்திகிறார்கள் ஆனால் அவர்களால் பேட்டிங் பிடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதை பற்றி ட்ராவிட் இடம் கேட்ட பொழுது ட்ராவிட் என்ன சொன்னார் தெரியுமா இங்கே பாருங்கள்.

“ஜாதவ் தன் திறமைகளை நிலைநாட்ட விரும்பினால் அவர் நான்காவது இடத்தில் தான் இறங்க வேண்டும்,அவரின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றால் அவர் ஆறாவது இடத்தில் இறங்குவது சரி இல்லை அவரின் திறைமையை அவரால் ஒளித்து வைக்க முடியாது.

எனவே அவருக்கு அவரின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஜாதவ் நான்காவது இடத்தில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும்” என்று ராகுல் ட்ராவிட் கூறியுள்ளார்.

யுவராஜ் மற்றும் தோனி ஜோடிகள் சரியாக விளையாடாமல் இருப்பதால் முதல் மூன்று பேட்ஸ்மான்களுக்கு ரன்களை அதிகமாக சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுக்கிறது.

எனவே ஜாதவ் பாண்டிய ஜோடிகளுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று ட்ராவிட் கூறியுள்ளார்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.