டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசில் வெற்றியை ருசித்த பிறகு, இன்னொரு நாட்டில் இன்னொரு அணியுடன் களமிறங்கவுள்ளார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான். தென்னாபிரிக்காவில் நடக்கப்போகும் டி20 கிரிக்கெட் தொடரில் கேப்டவுன் அணியை வாங்கினார் ஷாருக்கான். அவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கரேபியன் பிரீமியர் லீக்கில் ட்ரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணியை சொந்தமாக வைத்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் நடக்க போகும் டி20 தொடருக்கான அணிகளை ஷாருக்கான் மட்டும் இல்லாமல், இந்தியன் பிரீமியர் லீக் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் உரிமையாளர் ஜோஹன்ஸ்பெர்க் அணியை வாங்கியுள்ளார்.
தென்னாபிரிக்கா டி20 கிரிக்கெட் தொடரில் உள்ள 8 அணிகளை இரண்டு தென் ஆப்ரிக்காக்காரர்களும்,இரண்டு இந்தியன் பிரீமியர் லீக் அணிகளும், இரண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் அணிகளும், ஹாங்காங், துபாய் முதலீட்டார்களும் வாங்கியுள்ளார்கள்.
#CSAnews #T20GL Meet the @T20GL_ Franchise Owners https://t.co/0W0OWnSd6s pic.twitter.com/6bSQeHakaN
— Cricket South Africa (@OfficialCSA) June 19, 2017
இந்த தென்னாபிரிக்கா டி20 கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் தொடருக்கு சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடர் எப்போது தொடங்கும் என இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், நவம்பர் தொடக்கத்தில் தொடங்கி, டிசம்பர் 16ஆம் தேதி முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த டி20 தொடருக்கு முன்னாள், ஆகஸ்ட் 19ஆம் தேதி ஏலம் நடக்கவுள்ளது. இந்த ஏலத்தில் 10 நாடுகளில் இருந்து 400 வீரர்களுக்கு கலந்துகொள்ள உள்ளனர்.
அணியின் உரிமையாளர் மற்றும் நட்சத்திர வீரர்:
டர்பன் – பவட் ராணா, ஹஷிம் ஆம்லா
பெனோனி – ஜாவேத் அப்ரிடி, குவிண்டன் டி காக்
பிரிட்டோரியா – ஒஸ்மான் ஒஸ்மான், ஏபி டி வில்லியர்ஸ்
ஸ்டெள்ளேன்போஸ்ச் – முஸ்தாக் பிரே, பாப் டு பிளெஸ்ஸிஸ்
கேப் டவுன் – ஷாருக்கான், ஜே.பி. டுமினி
ப்லோயெம்போன்டெய்ன் – சுஷில் குமார், டேவிட் மில்லர்
ஜோஹன்னேஸ்பேர்க் – ஜி.எம்.ஆர். குரூப், காகிஸோ ரபாடா
போர்ட் எலிசாபெத் – அஜய் சேதி, இம்ரான் தாஹிர்