Cricket, Bharat Arun, India, BCCI, Ravi Shastri, Zaheer Khan

தற்போது இந்திய அணியில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் த்ரிப்தியாக உள்ளார். ஆனால், இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தால் இந்திய அணியின் பந்துவீச்சு இன்னும் பலமாகும் என கூறுகிறார்.

“எங்களிடம் வ்ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் (குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்த்ர சஹால்). ஆனால், நாங்கள் இடது கை வேகப்பந்து வீச்சாளரை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். ஒருவர் கிடைத்தால் கூட அணிக்கு பலமாகிவிடும்,” என பாரத் அருண் கூறினார்.

இந்திய அணியின் பந்துவீச்சை பற்றியும் அவர் புகழ்ந்தார்.

“தற்போது இந்திய அணிக்கு கிடைத்த வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் வரம் பெற்றது போல. அவர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். அவர்கள் செய்யும் தவறை திருத்த தான் நான் இருக்கிறேன், இதனால் அவர்களின் தவறை அவர்கள் சரிசெய்வார்கள்,” என மேலும் தெரிவித்தார்.

ஹர்டிக் பாண்டியாவை புகழ்ந்தார்

“நீங்கள் ஹர்டிக் பாண்டியாவை பாருங்கள், 135 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக வீசுகிறார். இதனால், சில சமயங்களில் சில பந்துவீச்சாளர்களை முயற்சிக்க வேண்டும்,” என அவர் மேலும் கூறினார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *