விராட் கோலிக்கு சப்போர்ட் செய்யும் எம்.எஸ். தோனி

ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களுக்கு ஒரு கிரிக்கெட் தொடர் நடந்தது, அதற்கு தலைமை விருந்தினராக சென்றார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அப்போது, இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலேயான போட்டி சாதாரண போட்டி மட்டும் இல்லை, அது அதற்கும் மேல் என பத்திரிகையாளர்களிடம் தோனி கூறினார்.

“இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலேயான போட்டி சாதாரண போட்டி அல்ல, அது அதை விட பெரியது. ஆனால், இது சாதாரண முடிவு அல்ல, அரசு தான் முடிவெடுக்க வேண்டும்,” என எம்.எஸ். தோனி கூறினார்.

காஷ்மீரில் உள்ள பட்டன் நகரத்தில் சீனர் கிரிக்கெட் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டியை கண்டு களித்தார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

Dhoni has now a huge role to play as a senior campaigner in the limited-overs cricket. Photo Credit: Getty Images.

பிசிசிஐ மீது காண்டான விராட் கோலி:

ஜனவரி ஐந்தாம் தேதி இந்திய அணி விளையாட போகும் மிக பெரிய தொடரான தென்னாபிரிக்கா தொடர் தொடங்கவுள்ளது. இலங்கை அணியுடன் தொடர் முடிந்து அடுத்த இரண்டு நாட்களில் தென்னாபிரிக்கா தொடர் தொடங்கவுள்ளது. இதனால், ஒரு முக்கிய தொடருக்கு தயாராக போதிய நேரம் இல்லாததால், பிசிசிஐ மீது பாய்ந்தார் கேப்டன் விராட் கோலி.

“இந்த இலங்கை தொடர் முடிந்ததும், நாங்கள் தென்னாப்ரிக்காவுக்கு செல்ல உள்ளோம். ஆனால், அதற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ளது. எங்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை, போட்டியின் நிலைமையை வைத்து அடுத்து என்ன நடக்க போகிறது என்று யோசிக்கவேண்டும்,” என கோலி தெரிவித்தார்.

இலங்கை அணியுடன் டி20 தொடர் டிசம்பர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதன் பிறகு தென்னாப்ரிக்காவுக்கு சென்று இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

போதிய நேரம் இல்லை என கோலி கூறியதற்கு சப்போர்ட் செய்தார் தோனி:

“இந்த முறை தென்னாபிரிக்காவுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள அணி தன்னை தயார் படுத்தி கொள்ள சில நாட்கள் மட்டும் கிடைக்கும்,” என தோனி கூறினார்.

“வெளிநாட்டு நிலைமைக்கு தன்னை மாற்றி கொள்வது கொஞ்சம் கடினம் தான், ஆனால் இந்த அணியை பாருங்கள், இந்த அணியில் உள்ள பல வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடி உள்ளார்கள், இதனால் இது கண்டிப்பாக இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்,” என தோனி கூறினார்.

“அதன் பிறகு ஒருநாள் அணியில் விளையாட உள்ள வீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே சென்று பயிற்சி எடுக்கவேண்டும், ஏனென்றால் அங்கு பந்துகள் அதிகமாக பவுன்சர் ஆகும்,” என தோனி மேலும் கூறினார்.

தென்னாபிரிக்கா அணியுடன் விளையாடுவது ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு சவால் தான் என தோனி தெரிவித்தார்.

“ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு, இந்த தென்னாபிரிக்கா தொடர் சவாலாக தான் இருக்கும்,” என தோனி கூறினார்.

இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மகேந்திர சிங் தோனி, 2014ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 144 டெஸ்ட் இன்னிங்சில் விளையாடி இருக்கும் தோனி, 4876 ரன் அடித்திருக்கிறார். அதில் 6 சதம் மற்றும் 33 அரைசதங்கள் அடங்கும்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.