பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் அதை வீரர்கள் பெரிய விஷயமாக கொண்டாடுகிறார்களோ இல்லையோ ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட துடக்கிடுவார்கள்.அந்த வகையில் நேற்று பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா பாக்கிஸ்தான் ஐசிசி தொடர் ஆன சாம்பியன் ட்ரோபி 2017இல் இறுதி போட்டியில் மோதியது.
இதில் பாகிஸ்தான் அணி 180 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட துடங்கினார்கள்.
நேற்று ஆட்டத்தை முடித்து விட்டு ட்ரெஸ்ஸிங் ரூம்க்கு இந்திய வீரர்கள் ஒருவர் பின்னல் ஒருவர் சென்று கொண்டு இருந்தார்கள் அப்பொழுது அங்கு இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வீரர்களை கிண்டல் செய்தார் இதனால் இந்திய அணியின் முகமத் ஷமி அவர் மீதி கோவம் கொண்டார்.
ஆனால், கோபத்தை கட்டுப்படுத்த முடியாத பந்துவீச்சாளர் முகமது சமி, ஒரு ரசிகனை பார்த்து யார் உனது தந்தை என கோபமாக கேட்டுள்ளார். இவற்றை கவனித்துக்கொண்டே சமிக்கு பின்னால் வந்த டோனி, தனது கையால் முகமது சமியை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
அந்த விடியோவை பாருங்கள் :