இலங்கை அணிக்கு சிறிது கூட நல்ல காலம் இல்லை போலும். அடிமேல் ஆதி வாங்கி பரிதவித்து வரும் இலங்கை அணிக்கு மேலும் ஒரு அடி விழுந்துள்ளது. இலங்கை அணியின் ஆல் ரவுண்டர் ஆஞ்சலோ மேத்யூஸ் அடுத்த டி20 போட்டியில் இருந்து விலகியுள்ளார். நேற்று (டிச.22) நடந்த இரண்டாவது டி20 போட்டியின் போது அவருக்கு தொடையில் ஏற்பட தசைப்பிடிப்பின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் 12ஆவது ஓவர் பேட்டிங்கின் போது பந்து வீச வந்த ஆஞ்சலோ மேத்யூஸ் பந்து வீச ஓடி வரும் போதே, தசை பிடிப்பின் காரணமாக பந்து வீசமல் நின்றுவிட்டார்.
பின்னர், மேலும் பந்து வீச முடியாத நிலை ஏற்பபட அவர் அப்படியே ஆட்டத்தில் இருந்து பந்து வீச முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். இலங்கை பந்து வீச்சாளர்கள் அனைவரின் பந்துகளையும் நாலாபுறமும் பறக்க விட்ட இந்திய வீரர்களுக்கு நேற்று சற்று நன்றாக பந்து வீசியவர் மேத்யூஸ் மட்டுமே. 2.2 ஒவர்கள் வீசி 16 ரன் மட்டுமே வீட்டுக்கு கொடுத்தார். அதே நேரத்தில் இவரால் பேட்டிங்கும் செய்ய இயலவில்லை. அதன் காரணமாக பேட்டிங் செய்ய வராமல் அப்ஷண்ட் ஹர்ட் ஆனார்.
கடந்த ஒரு வருடமாக இதே காயத்தல் அவதிப்பட்டு வருகிறார் மேத்யூஸ். இந்த தசை பிடிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தென்னாபிரிக்கவுடன் ஆடிய தொடருக்கு பின் 5 மாதம் காயம் காரணமாக ஆடவில்லை.
மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பைக்கு அணிக்கு திரும்பினார். ஆனால், பந்து வீசவில்லை. இப்படியாக காதயத்தை குறைத்து கொண்டே வந்தார். அதன் பின்னர் இந்திய தொடரிலும் பந்து வீசமல் பேட்டிங் மட்டுமே பிடித்தார் மேத்யூஸ். இந்தியாவுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரிலும் பேட்டிங் மட்டுமே பிடித்த அவர் நேற்று பந்து வீச முற்படும் போது மீண்டும் அந்த காயம் அவரை பற்றிக்கொண்டது.
இது குறித்து இலங்கை அணியின் மேலாளர், அசுங்கா குருசிங்க கூறம் போது,
ஆஞ்சலோ மேத்யூஸ் இந்த தொடரின் கடைசி போட்டியில் ஆட மாட்டார். இந்த காயம் அவரை இரண்டு வாரங்கள் நோகடிக்கும். இதனால் அவர் இலங்கை செல்கிறார்.
எனக் கூறினார் அவர்.