சென்னை சூப்பர் கிங்ஸ்
ஜடேஜா வேண்டாம்… இவர் தான் சரியான ஆளு; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசிய முன்னாள் வீரர்

தோனிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த தகுதியான வீரர் யார் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த வருடத்திற்கான தொடர் வழக்கம் போல் மார்ச் மாத இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த வருட தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டூவைன் பிராவோ, ஜெகதீசன், கிரிஸ் ஜோர்டன் போன்ற வீரர்களை விடுவித்தது.

சென்னை அணி

கடந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டு அதன்பிறகு திடீரென கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும், அடுத்த வருட தொடருக்கான சென்னை அணி ரவீந்திர ஜடேஜாவை விட்டுகொடுக்காமல் தக்க வைத்து கொண்டது. ஆனால் அடுத்த தொடரிலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவார் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளையில் தோனிக்கு அடுத்த வருட ஐபிஎல் தொடரே கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் எனவும் பேசப்படுகிறது. இதனால் தோனிக்கு பிறகு சென்னை அணியை வழிநடத்த வாய்ப்புள்ள வீரர்கள் யார் என்ற விவாதமும் தற்போதே துவங்கிவிட்டது. முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் சென்னை அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.\

சென்னை அணி

அந்தவகையில், சென்னை அணிக்கான அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான வாசிம் ஜாபர், ருத்துராஜ் கெய்க்வாட்டே சென்னை அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜடேஜா வேண்டாம்... இவர் தான் சரியான ஆளு; சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசிய முன்னாள் வீரர் !! 1

இது குறித்து வாசிம் ஜாபர் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் தோனிக்கு பிறகு சென்னை அணியின் விக்கெட் கீப்பராக டீவன் கான்வே செயல்படுவார் என கருதுகிறேன். அதே போல் அடுத்த கேப்டனை உருவாக்க வேண்டிய தேவையும், பொறுப்பும் தோனியிடம் உள்ளதால் அதற்கான வேலையை அவர் அடுத்த தொடரிலேயே துவங்குவார் என கருதுகிறேன். அதே போல் ருத்துராஜ் கெய்க்வாட் சென்னை அணிக்கான அடுத்த கேப்டன் ரேசில் முதல் ஆளாக இருப்பார் என கருதுகிறேன். அவருக்கு சென்னை அணியும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ருத்துராஜ் கெய்க்வாட் மஹராஸ்டிரா அணியை வழிநடத்திய அனுபவம் உள்ளவர் என்பதாலும், அவரால் இன்னும் பல வருடங்கள் சென்னை அணிக்காக விளையாட முடியும் என்பதாலும் சென்னை அணி அவருக்கு முக்கியத்தும் கொடுத்து அவரை சிறந்த கேப்டனாக்க முயற்சி செய்யும்” என்று தெரிவித்தார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *