சுப்மன் கில், ரோஹித் சர்மா இல்லை... அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை வச்சு செய்ய போவது இவர் தான்; ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை !! 1
சுப்மன் கில், ரோஹித் சர்மா இல்லை… அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை வச்சு செய்ய போவது இவர் தான்; ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடி நாயகன் ஜெய்ஸ்வாலின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

சுப்மன் கில், ரோஹித் சர்மா இல்லை... அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை வச்சு செய்ய போவது இவர் தான்; ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை !! 2

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி 2ம் தேதி விசாகப்பட்டிணம் மைதானத்தில் துவங்க உள்ளது.

இந்தநிலையில், இந்தியா – இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

சுப்மன் கில், ரோஹித் சர்மா இல்லை... அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை வச்சு செய்ய போவது இவர் தான்; ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை !! 3

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “ஜெய்ஸ்வால் நல்ல பார்மில் உள்ளார். கடந்த போட்டியிலும் அவர் சிறப்பான பேட்டிங்கையே வெளிப்படுத்தினார். இரண்டாவது போட்டி நடைபெற இருக்கும் விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு இலகுவாக இருக்கும் என்பதால் யசஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி பேட்டிங் இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையலாம். அவரால் ஈசியாக போட்டியை மாற்றி கொடுக்க முடியும். அடுத்த போட்டியில் அவர் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுக்கும் வீரராக இருப்பார் என்றே கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.

சுப்மன் கில், ரோஹித் சர்மா இல்லை... அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை வச்சு செய்ய போவது இவர் தான்; ஆகாஷ் சோப்ரா நம்பிக்கை !! 4

மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா,  “ரோஹித் சர்மா என்னும் தலைசிறந்த வீரர் நம்மிடம் இருப்பதை யாரும் மறந்துவிட கூடாது. அவரால் தனி ஆளாக போட்டியை மாற்றி கொடுக்க முடியும். இங்கிலாந்து அணி கடந்த முறை இந்தியா வந்திருந்த போதும், முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது, ஆனால் இரண்டாவது போட்டி ரோஹித் சர்மா தனி ஆளாக போட்டியை மாற்றி கொடுத்தார். அடுத்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *