Cricket, India, New Zealand

3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று T20 ஓவர் ஆட்டத்தில் விளையாட நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்தது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.

இதற்காக நியூசிலாந்து வீரர்கள் நேற்று இந்தியா வந்தனர். முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் இந்தியா வந்துள்ளதை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

நியூசிலாந்து ‘ஏ’ அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. இதில் உள்ள 6 வீரர்கள் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் நியூசிலாந்து அணியோடு இணைந்து கொள்வார்கள்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 22-ந்தேதி மும்பையில் நடக்கிறது. 29-ந்தேதியுடன் ஒருநாள் தொடர் முடிகிறது.

முதல் 20 ஓவர் ஆட்டம் நவம்பர் 1-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. 7-ந்தேதியுடன் நியூசிலாந்து அணியின் இந்திய சுற்றுப்பயணம் முடிகிறது.

ஒருநாள் தொடருக்கு முன்பு நியூசிலாந்து அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. வருகிற 17 மற்றும் 19-ந்தேதிகளில் இந்த பயிற்சி ஆட்டம் நடக்கிறது.

வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்திய அணி தொடர்ச்சியாக 6 ஒருநாள் தொடரை (ஜிம்பாப்வே, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா) வென்று இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் வென்று 7 ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *