பாகிஸ்தான் ஸ்காட்லாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் ஷோயிப் மாலிக் அதிரடியான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஷ் அஹமது பேட்டிங் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய பாகர் சமான் மற்றும் சேஷாத் இருவரும் சிறந்த துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்து வந்தவர்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை.
ஷோயிப் மாலிக் மட்டும் 5 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என 22 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். பந்து வீச்சில் லியாஸ்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது பாகிஸ்தான் அணி.
அடுத்ததாக களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி துவக்கம் முதலே சொதப்ப ஆரம்பித்தனர். பெரிங்டன் மற்றும் மேக்லீயாட் இருவரும் சற்று நிதானமாக ஆடினாலும், நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அடுத்து வந்த அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க ஸ்காட்லாந்து அணி 14.4 ஒவர்களில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தொடரையும் இழந்தது.
84 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்றது. 2 ஒவர்களில் 4 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்திய உஸ்மான் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.