சமீபத்தில் ஐ.பி.எல் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த இரண்டு திறமையான இரண்டு அருமையான வீரர்கள் பாண்டியா சகோதரர்கள். ஒருவர் ஹர்திக் பாண்டியா மற்றொருவர் அவருடைய அண்ணன் க்ருனால் பாண்டியா. இருவரும் மும்பை இந்தியஸ் அணிக்காக ஆடிய போது கிரிக்கெட் உல்கைன் பார்வைக்கு வந்தவர்கள்.

ஹர்திக் பாண்டியா, வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்பதால் அதிரடியா இந்திய அணியில் இடம் பிடித்து சர்வதேச் அகிரிக்கெட்டில் கலக்கி வருகிறார். அர்வுடைய அண்ண க்ருனால் பாண்டிய இடது கை சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர். தற்போது அவருடைய இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
தற்போது, 26 வயதான க்ருனால் பாண்டியா அவருடைய நீண்ட நாள் காதலில் பன்க்குரி சர்மாவை திருமணம் செய்யவுள்ளார். வரும் டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி மும்பையில் உள்ள ஹோட்டல் சான்டா க்ரூசில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இது குறித்து க்ருனால் பாண்டியா கூறியதாவது,
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் நாங்கள் திருமணம் செய்யவுள்ளோம். திருமணம் நடக்கௌ அதே நால் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். என்னை நன்றாக புரிந்துகொண்ட என் தோழியை மணந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.
கடந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் வென்றது. இந்த பைனல் மேட்ச்சில் ஆட்ட நாயகன் விருது பெற்றதும், அவளுக்கு ப்ரோபோஸ் செய்தேன். பின்னர் அவளும் சரி என்று கூறினாள்
பரோடா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடி வரும் க்ருனால் பாண்டியா, காயம் காரனமாக இந்த வருடன் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் ஆடவில்லை. தற்போது இழந்த ஆட்டத்திறனை மீட்க முயற்சி செய்து வருகிறார்.
அவருடைய வருங்கால மனைவி, பன்க்குரி சர்மாவை எப்படி சந்தித்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த க்ருனால்,
அவள் என்னுடைய தோழியுடைய தோழி. இரண்டு வருடத்திற்கு முன்னர் ஓரு பொது நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்தோம். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள ஆரம்பித்தோம்.
இருவருக்கும் ஒரே வயது தான், இருவரும் ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டவர்கள், அவள் மிக எளிமையானவள், எனக்கு மிகவும் ஆதரவாக இருப்பாள்.
எனக் கூறினார் க்ருனால் பாண்டியா.
க்ருனால் பாண்டியாவின் வருங்கால மனைவி, பன்க்குரி கடந்த 5 வருடங்களாக மும்பையில் வசித்து வருகிறார். முன்னர் பிலிம் மார்க்கெட்டின் செய்து வந்தார். தற்போது அதனை விட்டுவிட்டார்.