இந்திய அணியின் இடம்பெற யோ-யோ தேர்வில் பாஸ் ஆக வேண்டும்

இந்திய அணியின் இடம்பெற யோ-யோ தேர்வில் பாஸ் ஆக வேண்டும் என பிசிசிஐ அதிகாரி ராகுல் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் சீனியர் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் யோ-யோ தேர்வில் பெய்ல் ஆனதால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இதனால், தற்போது இந்த யோ-யோ தேர்வை பற்றி அனைவரும் பேசுகிறார்கள். சிலர் யோ-யோ தேர்வில் பாஸ் ஆகவேண்டும் எனவும், சிலர் யோ-யோ தேர்வு தேவை இல்லாதது எனவும் கூறுகிறார்கள்.

“கேப்டன், பயிற்சியாளர், அணி தேர்வாளர் என அனைவரும் ஒரு அளவை செட் செய்திருக்கிறோம். இந்திய அணியின் இடம் பெற தான் அந்த அளவை அவர்கள் குறித்துள்ளார்கள்,” என ராகுல் ஜோஹ்ரி கூறினார்.

தேர்வில் தேர்ச்சி பெற ஒரு அளவு இருக்கிறது, வரும் நாட்களில் அந்த அளவை அதிக படுத்துவோம் என ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.

“யோ-யோ தேர்வில் தற்போது தேர்ச்சி ஆக 16.1 புள்ளி எடுக்கவேண்டும். தற்போதய இந்திய வீரர்கள் இந்த புள்ளிகளை அசால்டாக எடுத்து விடுகிறார்கள். இதனால், அடுத்து வரும் நாட்களில் இந்த அளவை அதிகரிக்க உள்ளோம்,” என ராகுல் ஜோஹ்ரி கூறினார்.

தற்போது இந்திய அணியில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என பிசிசிஐ அதிகாரி ராகுல் ஜோஹ்ரி தெரிவித்தார்.

“கிரிக்கெட் வீரர்களின் உடல்தகுதியை சோதனை செய்ய யோ-யோ தேர்வு மட்டுமே தீர்வு அல்ல. அவர்களுக்கு மன உறுதியும் முக்கியமாக தேவை,” என பெயர் தெரியாத நபர் கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.