Cricket, India, IPL, Rahul Dravid

19 வயதிற்கு உட்பட்டோர்கள் இந்திய கிரிக்கெட் அணி தெறி பார்மில் இருக்கிறது. தற்போது நடந்து வரும் 19 வயதிற்கு உட்பட்டோர்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணி, பிப்ரவரி 2ஆம் தேதி நடக்கும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி களமிறங்குகிறது.

இந்த உலகக்கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 100 ரன் வித்தியாசத்தில் நசுக்கிய இந்திய அணி, அடுத்தடுத்து PNG, ஜிம்பாப்வே, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே இந்திய அணி தான் வலுவானது என அனைவரும் கூறினார்கள். அதே போல் இந்திய அணியும் இது வரை நிரூபித்திருக்கிறது.

இந்திய அணியின் கேப்டன் ப்ரித்வி ஷா மற்றும் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் ஆகியோர் சிறப்பாக விளையாடி வர, பந்துவீச்சில் கமலேஷ் சிறப்பாக பந்து வீசுகிறார். முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் கவனத்திற்கு சென்ற இவர், இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

தொலைபேசியை உபயோகிக்க கூடாது என ராகுல் டிராவிட் எச்சரிக்கை 1
India’s Shubman Gill celebrates 100 runs during the U19 semi-final cricket World Cup match between India and Pakistan at Hagley Oval in Christchurch on January 30, 2018. / AFP PHOTO / Marty MELVILLE (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

எனினும், ஐபில் ஏலம் மற்றும் தொலைபேசிகள் மூலம் கவனத்தை சிதறவிட கூடாது என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எச்சரித்துள்ளார். உலகக்கோப்பை இறுதி போட்டி முடியும் வரை தொலைபேசிகளை உபயோகிக்க கூடாது என ராகுல் டிராவிட் அறிவுறுத்தி உள்ளார்.

பத்திரிகையாளர்கள்களிடம் பேசிய சிவம் மாவின் தந்தை பங்கஜ் மாவி, இறுதி போட்டி முடியும் வரை அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாது என கூறியதாக தெரிவித்தார்.

தொலைபேசியை உபயோகிக்க கூடாது என ராகுல் டிராவிட் எச்சரிக்கை 2
In good batting conditions, India’s three left-arm spinners may not be as effective against a sub-continental team, born and bred on spin. So far, the trio have strangled the runs in the middle overs and even been employed in the first power play.

“நான் கடைசியாக சிவமிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசினேன். அப்போது இறுதி போட்டி வரை தொலைபேசிகளை உபயோகிக்க கூடாது என ராகுல் டிராவிட் தெரிவித்ததாக கூறினான்,” என பங்கஜ் மாவி தெரிவித்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *