தற்போது இந்திய அணி இலங்கைக்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 5வது போட்டிக்காக இரண்டு அணிகளும் கடுமையாக பயிற்சி எடுத்து வந்தது. ஆனால், அவர்களின் பயிற்சி வீணாக வாய்ப்புள்ளது. இலங்கையில் காலையில் இருந்து கனமழை பெய்வதால் இந்த போட்டி நடப்பது சந்தேகம் தான்.
வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டியை முழுசாக பார்க்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார்கள், ஆனால் காலையில் இருந்து மழை கொட்டிவருகிறது.
Am afraid news coming out of Colombo not so good. It's been raining since morning with a bleak forecast for the day/evening #IndvSL
— Vikrant Gupta (@vikrantgupta73) September 3, 2017
இப்போது மழை நின்றால் இந்த கடைசி ஒருநாள் போட்டி சுவாரசியமாக இருக்கும். இரண்டு அணிகளுமே இந்த தொடரில் நல்ல அனுபவத்தை கற்று கொண்டிருக்கிறார்கள். இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை வென்றது இந்தியா. ஒருமுறை கூட இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடையவில்லை. அதே சமயத்தில் இலங்கை அணியும் ஒரே ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால், இந்த ஐந்தாவது போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, ஆறுதல் வெற்றியை பெற இலங்கை அணி முனைப்புடன் உள்ளது.
Hopefully, not for too much longer! pic.twitter.com/uKTyfZvaf0
— Harsha Bhogle (@bhogleharsha) September 3, 2017
மழை தொடர்ந்து வந்து இந்த போட்டி இன்று நடக்கவில்லை என்றால், அதே இடத்தில், அதே நேரத்தில் செப்டம்பர் 4 (நாளை) அன்று நடைபெறும்.