Irfan Pathan, Irfan Pathan IPL, Irfan Pathan IPL 2017, Irfan Pathan Gujarat Lions, Gujarat Lions, IPL 2017, Cricket

ரஞ்சி கோப்பை 2017 – 18 சீசனில் பரோடா அணிக்காக கேப்டனாக செயல்படுவார் இர்பான் பதான். கடந்த ரஞ்சி கோப்பை சீசனிலும் அவர் தான் கேப்டனாக இருந்தார், ஆனால் அது மறக்கவேண்டிய ஒரு சீசன் ஆகும். 8 போட்டிகளில் பதான் தலைமையிலான பரோடா அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அவர் பந்துவீச்சில் 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.

இந்த அணியை அறிவிப்பதற்கு முன்னாள், அவரை கேரளா அணிக்காக விளையாட கேட்டார்கள் ஆனால் கேரளா அணிக்கு அருண் கார்த்திக் இருந்ததால், பதானுக்கு பதிலாக அருண் கார்த்திகை கூப்பிட்டார்கள். கேப்டன் பதவி கொடுத்ததால் பதான் எங்கேயும் போக மாட்டார் என பரோடா அணியின் தேர்வாளர்கள் தெரிவித்தார்கள்.

கடந்த சீசனில் சில போட்டிகளில் இர்பான் பதான் விளையாடவில்லை, இதனால் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா தான் கேப்டனாக பணியாற்றினார். அவர் இப்போது துணைகேப்டனாக செயல் படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யூசுப் பதான், ஸ்வப்னில் சிங் என முக்கியமான வீரர்களும் இந்த அணியில் உள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் கலக்கிய க்ருனால் பாண்டியாவை அணியில் எடுக்கப்படவில்லை. ஜூனியர் இந்தியா அணிக்காக விளையாடிய அவர், முதல் நிலை கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. இன்னொரு முக்கியமான வீரர் முனாப் பட்டேலும் இந்த அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சி கோப்பை 2017-18 சீசனில் பரோடா அணி முதல் போட்டியில் மத்தியபிரதேசம் அணியுடன் மோதவுள்ளது.

ரஞ்சி கோப்பை 2017-18 சீசனுக்கான பரோடா அணி:

இர்பான் பதான், தீபக் ஹூடா, யூசுப் பதான், ரிஷி அரோதே, கேதார் தேவ்தார், லுக்மான் மேரிவாளா, கேட்டுள் பட்டேல், மிதேஷ் பட்டேல், பாபாஷாபி பதான், பினால் ஷா, அடிட் சேத், விஷ்ணு சோலங்கி, ஸ்வப்னில் சிங், சோயப் டை, ஆதித்யா வாக்மோடே

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *