ரஞ்சி டிராபி தொடருக்கான தமிழ்நாடு அணியில் அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 அணியில் விளையாட இருப்பதால் கேப்டன் பதவி கிடைக்கவில்லை.

விஜய் சங்கர்
மேலும், டி20 அணியில் இடம் கிடைக்காத அஸ்வின், காயத்தில் இருந்து மீண்டுள்ள முரளி விஜய் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு அணி வலுவானதாக இருக்கும் என எதிர்பா்ரக்கப்படுகிறது.
தமிழ்நாடு அணியில் இடம்பிடித்துள்ள 15 பேர் கொண்ட வீரர்கள் விவரம்:-
1. அபிநவ் முகுந்த் (கேப்டன்), 2. பாபா இந்திரஜித் (துணை கேப்டன்), 3. முரளி விஜய், 4. கவுசிக் காந்தி, 5. என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), 6. பாபா அபரஜித், 7. வாஷிங்டன் சுந்தர், 8. ரஹில் எஸ். ஷா, 9. கே. விக்னேஷ், 10. அஸ்வின், 11. எல். விக்னேஷ், 12. ஆர். சாய் கிஷோர், 13. வி. லட்சுமணன், 14. ஆர். ரோகித் (விக்கெட் கீப்பர்), 15. மலோலன் ரங்கராஜன்.