இந்திய அணியின் தோல்விக்கு பும்ரா வீசிய அந்த நோ-பால் காரணம் இல்லை என சூசகமாக கூறியுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.தோல்விக்கு ஒருவரை மற்றும் குற்றம் சாட்டுவது தவறு, அதுவும் ஒரு பந்து வீச்சாளரை கை காட்டுவது முறையல்ல.
இலங்கைக்கு எதிரான முதல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பும்ரா வீசிய நோ-பால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இலங்கை- இந்திய கிரிக்கெட் அணி மோதிய முதல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 112 ரன்களுக்குள் சுருண்டது. பின்னர், இந்திய அணி பீல்டிங் செய்தபோது, பும்ரா வீசிய பந்து கேட்சாக மாறியது. பின்னர் அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது.
பும்ராவின் நோ-பால் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் பரபரப்பாக பேசப்பட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டியில் பும்ரா, வீசிய பந்தில் ஓபனிங் பேட்ஸ்மேன் பகார் ஜமான் அவுட் ஆனார். ஆனால் அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டதால் தப்பிய அவர், செஞ்சுரி அடித்து பாகிஸ்தான் வெற்றி பெற உதவினார். இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக விமர்சிக்கப்பட்டது.
ஆனால் இலங்கை அணியுடனான நேற்றைய தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறியது :
தோல்விக்கு ஒருவரை மற்றும் குற்றம் சாட்டுவது தவறு, அதுவும் ஒரு பந்து வீச்சாளரை கை காட்டுவது முறையல்ல. இது பேட்டிங் தோல்வி, அனைவரும் மொத்தமாக பேட்டிங்கில் சொதப்பி விட்டோம்.