நடந்து முடிந்த ஐபில் தொடரில் ஏலம் எடுப்பதில் துவங்கி இறுதிபோட்டி வரை பரபரப்புக்கும் விருவிருப்புக்கும் குறைவே இல்லை. இந்தமுறை ஒருபடி மேலே போய் முடிந்த பின்பும் பரபரப்பாகவே போய்க்கொண்டிருக்கிறது.
கொல்கத்தா அணிக்கு வீரர்களை தக்கவைத்துகொள்வதில் இருந்து வீரர்களை ஏலம் எடுப்பது, கேப்டன் பதவியை யாருக்கு கொடுப்பது என எல்லாமே சர்சையும் மனக்கசப்புமாகதான் நடந்துமுடிந்தது.
இவ்வாறிருக்க, நேற்றைய தினம் (ஜூன் 1) இந்தியஅணி வீரரும் கொல்கத்தா அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் பிறந்ததினம். இதனால் இவருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன. குறிப்பாக, கொல்கத்தா அணியின் உரிமையாளரும் பிரபல பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
கொல்கத்தா அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு மத்த வீரர்கள் பெருமளவு சோபிக்கவில்லை. காயம் காரணமாக மிச்சேல் ஜான்சன் க்கு விளையாட வாய்ப்பளிக்கவில்லை, கிறிஸ் லின் அனைத்து போட்டிகளில் விளையாடிய பொழுதும் சிறந்த துவக்கம் அமைத்து தர தவறவிட்டார். எனினும் தினேஷ் கார்த்திக் மட்டும் ஒருவராகவே இறுதிவரை எடுத்துச்சென்று லீக் போட்டிகளில் விக்கெட் இழக்காமல் வெற்றி பெற்று தந்தார். மேலும் சில போட்டிகளில் துவக்கத்தில் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் தனது கேப்டன்ஷிப் திறமையால் இறுதி ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தி மொத்த ரன்களை கணிசமாக குறைத்திருக்கிறார்.
இந்த ஐபில்லில் இவர் 498 ரன்கள் குவித்துள்ளார். சராசரியாக 50 ரன்களும் ஸ்ட்ரைக் ரேட் 147 க்கு மேலும் வைத்துள்ளார்.
இது மாதிரியான திறமைகள் ஷாருக்கானுக்கு பிடித்து போக அவர் ட்விட்டரில், ” கேப்டனுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.. இது வழக்கமான வாழ்த்தாக நிச்சயமாக இருக்காது.. இவரை தவிர வேறு எவரும் இந்த அளவிற்கு தகுதியானவர்கள் ஆக முடியாது. ஒரு சில திறமையானவர்களில் ஒருவர் எங்களுக்கு கிடைத்திருப்பது பெருமிதம்.. வாழ்த்துக்கள்” இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
Wishing my Captain @DineshKarthik the happiest of Birthday. Not because it is customary to do so, but because nobody else deserves it more. We have such Few Good Men left…so need to celebrate them. Love u man. Be healthy & happy.
— Shah Rukh Khan (@iamsrk) June 1, 2018
இதற்கு கொல்கத்தா மற்றும் காம்பிர் ரசிகர்கள், இவ்வளவு ஆண்டுகாலம் கொல்கத்தாவில் இருந்து வெற்றி தேடித்தந்த காம்பீரை இழிவுபடுத்தும் விதமாக இந்த பதிவு உள்ளதாக பலரும் சாடியுள்ளார்கள்.