இந்தியா இரண்டு போட்டிகளில் தோல்வி பெற்றால் என்ன நடக்கும்?

இலங்கை அணியை போலவே, இந்திய அணியும் 4-1 என்ற கணக்கில் இந்த ஒருநாள் தொடரை வென்றால் தான், ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் மூன்றாவது இடத்தை தக்கவைத்து கொள்ள முடியும்.

இந்த தொடரில் 2 போட்டிகளில் இந்திய அணி தோல்வி பெற்றால், இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திற்கு வர, இந்திய அணி 4வது இடத்திற்கு செல்லும்.

தற்போது இருக்கும் இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருப்பதால், இலங்கை அணியை வைட்வாஷ் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இலங்கை அணியை குறைவாக மதிப்பிட  கூடாது. ஒருநாள் போட்டிகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஜிம்பாப்வே அணியுடன் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, பலம் வாய்ந்த இந்திய அணியுடன் போராடும் என எதிர்பார்க்க படுகிறது.

சில சாதனைகளை பார்க்கும் போதும், இந்திய அணி தான் கை ஓங்கி இருக்கிறது. ஒருநாள் தொடரில் கடைசியாக இலங்கை அணி இந்திய அணியை வீழ்த்தியது 1997-இல் ஆகும்.

2019 உலகக்கோப்பையில் நேரடி தகுதி பெற இலங்கை அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெறவேண்டும். அந்த ஒரு இடத்திற்கு இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2019 உலகக்கோப்பை தகுதி பெற போராட, முதல் மூன்று இடத்தில் இருக்க இந்திய அணியும் போராடும் என எதிர்பார்க்க படுகிறது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.