இந்த தொடரில் சில ஆய்வுகளை செய்வோம் – விராட் கோலி

டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரையும் சிறப்பாக தொடங்கி முதல் ஒருநாள் போட்டியை வென்றுள்ளது.

தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 139க்கு 1 விக்கெட் இழந்திருந்தது. அதன் பிறகு வந்த இலங்கை வீரர்கள், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சூழலில் மாட்டிக்கொண்டார்கள். இதனால், இலங்கை அணி 216 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்த எளிதான இலக்கை துரத்திய இந்திய அணி, ஆரம்பத்திலேயே ரோகித் ஷர்மாவின் விக்கெட்டை பறிகொடுத்தது. ஆனால், ஷிகர் தவான் 11வது சதம் அடிக்க, இந்திய அணி அசால்டாக வெற்றி பெற்றது.

விராட் கோலியும் அரைசதம் அடிக்க, 20 ஓவர் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் தன் அணியை பாராட்டி பேசினார் விராட் கோலி.

“அவர்கள் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள். 300க்கு கிட்ட சேஸ் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த பிட்சில் பேட்டிங் செய்வது எளிது. கடைசி மூன்று மாதங்களாக ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி வருகிறார். இது போன்று விளையாடி அவர் அணியில் இருக்கவேண்டும். அவர் இருக்கும் வரை, அணிக்கு வெற்றி வாங்கி தருவார்,” என விராட் கோலி தெரிவித்தார்.

“இந்த தொடரில் சில ஆய்வுகளை செய்யவுள்ளோம். இனி ஏற்படும் மாற்றங்களை நீங்கள் பார்ப்பீர்கள். அதற்காக தான் அனைவரையும் எடுத்திருக்கிறோம். அக்சர் பட்டேல் பேட்டிங் விளையாடுவார் மற்றும் அவர் ஒரு நல்ல பீல்டர், அதனால் தான் நான் அவரை தேர்ந்தெடுத்தேன். அடுத்து வரும் போட்டிகளில் ஓர் வேகப்பந்து வீச்சாளரை கூப்பிடுவோம் அல்லது மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவோம்,” என விராட் கோலி மேலும் கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.